/* */

காரியாபட்டி பேரூராட்சி பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் திட்டம்

இல்லங்கள் தோறும் மரக்கன்றுகள் நடும் திட்டம் பேரூராட்சித் தலைவர் செந்தில் தொடங்கி வைத்தார்

HIGHLIGHTS

காரியாபட்டி பேரூராட்சி பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் திட்டம்
X

காரியாபட்டி பேரூராட்சியில் இல்லங்கள் தோறும் மரக்கன்றுகள் நடும் திட்டம் பேரூராட்சித் தலைவர் செந்தில் தொடங்கி வைத்தார்

காரியாபட்டி பேரூராட்சியில் இல்லங்கள் தோறும் மரக்கன்றுகள் நடும் திட்டம் பேரூராட்சித் தலைவர் செந்தில் தொடங்கி வைத்தார்:

தமிழகத்தின் வனப்பரப்பை அதிகப்படுத்தும் நோக்கில் நடப்பாண்டில் முதற்கட்டமாக 2.80 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை பள்ளி மாணவர்களுடன் 500 உள்ளூர் நாட்டு மரக்கன்றுகளை நட்டு, பசுமை தமிழ்நாடு இயக்கத்தை வண்டலூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும், இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளவும், அப்பேரிடர்களிலிருந்து மக்களை பாதுகாக்கும் திறன் கொண்டதாகவும் திகழ்வதால், அதிக அளவிலான நாட்டு மரங்கள் நடுவது மற்றும் ஊக்குவிப்பது பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் முக்கிய குறிக்கோளாகும்.

அடுத்த பத்தாண்டு காலத்தில் நகர்ப்புற பகுதிகள், விவசாயப் பண்ணைகள், கல்வி நிறுவனங்கள், கோயில் நிலங்கள், தொழிற்சாலைகள், தொழிற்சாலைகளுக்கு சொந்தமான நிலங்கள், ஏரிக்கரைகள் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகள், ஆற்றுப் படுகைகள் மற்றும் பிற பொது நிலங்களில் பொருளாதாரம் மற்றும் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த உள்ளூர் மர வகைகள் நடப்படும்.பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ், பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் உயர்ரக மரங்களான சந்தனம், செம்மரம் மற்றும் ஈட்டி மரம் போன்ற மரங்களை வளர்க்க விவசாயிகள் ஊக்குவிக்கப்படுவார்கள்.

இயற்கை வளங்களை நிலையான முறையில் பயன்படுத்தி வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர், விவசாயிகள், கிராம மக்கள் போன்ற உள்ளூர் சமூகங்களின் வருமானத்தை பெருக்கவும் இத்திட்டம் உதவும்.பசுமை தமிழ்நாடு இயக்கத்திற்காக பல்வேறு மாவட்டங்களில் வனத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் நாற்றங்கால்கள் போன்றவற்றின் மூலமாக 2.80 கோடி மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டுள்ளன.

கொரோனா காலத்தில் போதிய ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் சிரமப்பட்டனர். அதனை தவிர்க்க வேண்டும் என்றால் எதிர்வரும் காலங்களில் ஒவ்வொருவரும் வீடுகள், கல்லூரி, தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் மரங்களை நட்டு வளர்க்க வேண்டும். மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள் தங்களை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரக்கன்றுகளை இலவசமாக வழங்க ஆணையிட்டுள்ளார்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சி மற்றும் கிரீன் பவுண்டேசன் நிறுவனம் சார்பாக இல்லங்கள் தோறும் மாக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி இல்லங்கள் தோறும் மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். எஸ்.பி எம்.டிரஸ்ட் நிறுவனர் அழகர்சாமி, கிரீன் பவுண்டேசன் நிர்வாக இயக்குனர் ராணி சட்ட ஆலோசகர் செந்தில்குமார் ஆசிரியர் ஆறுமுகம், திமுக தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் மனோஜ்குமார் , சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் சரவணன், முன்னாள் இராணுவ வீரர் நரசிம்மராஜ், சமூக ஆர்வலர் சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும், கிரீன் பவுண்டேசன் நிறுவனர் கூறியதாவது:தமிழக முதல்வரின் உன்னதமான பசுமை தமிழகம் திட்டத்தை காரியாபட்டி வட்டாரத்தில் முழுமையாக செயல்படுதத்தப்படும். பேரூராட்சித்தலைவர் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் ஒத்துழைப்போடு வாரம் ஒரு நாள் விடுமுறை தினத்தன்று வீடுகள் தோறும் மக்களை நேரில் சந்தித்து மரக்கன்றுகள் வழங்கப் படும்.பொதுமக்கள் கேட்கும் விருப்பமுள்ள கொய்யா, மாதுளை பப்பாளி மற்றும் மூலிகை செடிகள், வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், வீடுகளில் வழங்கும் மரங்களை சிறந்த முறையில் பராமரிக்கும் இல்லத்தரசிகளுக்கு பரிசுகள் வழங்கப் படும் என்று தெரிவித்தார்.காரியாபட்டி,எஸ்.எம்.பி. டிரஸ்ட், பல்வேறு சமூகப் பணிகளை அப் பகுதியில் தொடர்ந்து செய்து வருகிறதாம். நிர்வாகி அழகர்சாமி தலைமையில் அப்பணியானது நடைபெற்று வருகிறது.

Updated On: 6 Nov 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  8. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    வெயிலில் வாடிய பெண்களுக்கு வழங்கப்பட்ட குடை மற்றும் தண்ணீர் பாட்டில்
  10. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!