/* */

காரியாபட்டியில் 108 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

அசேபா நிறுவனம் சார்பாக காரியாபட்டியில் 108 ஜோடி மணமக்களுக்கு இலவச திருமணம் நடைபெற்றது

HIGHLIGHTS

காரியாபட்டியில் 108 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
X

காரியாபட்டியில் நடைபெற்ற இ-சேவை மையத்திறப்பு விழா

காரியாபட்டியில் 108 ஜோடி மணமக்களுக்கு இலவச திருமணம் அசேபா நிறுவனம் சார்பாக நடைபெற்றது.

காரியாபட்டியில் 108 பேருக்கு இலவச திருமணம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அசேபா நிறுவனம் சார்பாக , 108 ஜோடிகளுக்கு சர்வமத இலவச திருமணம் அன்னபூரணி ஆலய வளாகத்தில் நடைபெற்றது.. விழாவுக்கு, அசேபா நிர்வாக இயக்குனர் லோகநாதன் தலைமை வகித்தார்.

தலைவர் சந்திர பால் முன்னிலை வைத்தார். வேதாத்திரி மகரிஷி ஆஸ்ரமம் நிறுவனர் அழகர் ராமானுஜம், பிஷப் பீட்டர் ரெமிஜியஸ், மதுரை காதர்மைதீன் ஆகியோர் முன்னிலையில், 108 ஜோடி மணமக்களுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு, உலக நலனுக்காகவும் மண்வளம் காக்கவும் பெண்மையை போற்றும் வகையில் அன்னபூரணி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவில், திருமணம் செய்துகொண்ட மணமக்களுக்கு சீர்வரிசை மற்றும் விருந்து வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், தோணுகால் ஊராட்சி மன்றத் தலைவர் பாலமுருகன், டாக்டர் சாரல் தங்கம், சர்வ சேவா பள்ளிகள் இயக்குனர் வசந்தா . நடராஜன், உலகநாதன், உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, அசேபா திட்டப் பணியாளர்கள் செய்தனர்.

காரியாபட்டி கல்குறிச்சியில் தமிழக அரசின் இ.சேவை மையம் திறப்பு.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் அமல ரத்த பரிசோதனை மைய வளாகத்தில், தமிழக அரசு இ.சேவை மையம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு, விருதுநகர் தபால்நிலைய மக்கள் தொடர்பாளர்பால்ச்சாமி தலைமை வகித்தார்.

இ. சேவை மைய நிர்வாகி முனீஸ்வரன் முன்னிலை வகித்தார்.எஸ்.பி.எம். டிரஸ்ட் நிறுவனர் அழகர்சாமி, இ.சேவை மையத்தை திறந்து வைத்தார். விழாவில், மனித பாதுகாப்பு கழக மாவட்ட செயலாளர் பிரின்ஸ், சாய்பாபா பாராமெடிக்கல் கல்லூரி முதல்வர் மகேஸ்வரி, ஜனசக்தி பவுண்டேசன் நிறுவனர் சிவக்குமார்,கிராம நிர்வாக அதிகாரிகள் ராம்குமார், மணிபாரதி, மணிமுத்து மற்றும் சமூக ஆர்வலர் ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 23 Aug 2023 6:45 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  2. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  3. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  7. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  9. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு
  10. உலகம்
    பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் கலவரம்! காவல்துறையினருடன் ...