/* */

அந்தநாள் நியாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே! முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

பள்ளியின் பொன்விழா ஆண்டு குடும்ப விழாவில் பழைய மாணவர்கள் சந்திந்து, மலரும் நினைவுகளில் மூழ்கினர்.

HIGHLIGHTS

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பாலையம்பட்டியில் உள்ள, ஐயப்பன் திருமண மண்டபத்தில், எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1971-ம் ஆண்டில் பயின்ற மாணவர்கள், பள்ளினியின் பொன்விழா ஆண்டு குடும்ப விழாவின் ஒருபகுதியாக சந்தித்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், பழைய மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் 50 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்தபோது, தங்களது பழைய நினைவுகளில் மூழ்கித் திளைத்தனர். அந்த நாள் நியாபகம் நெஞ்சிலே வந்ததே என்பதாக, தங்களின் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மேலும் தங்கள் குடும்பத்தினரையும், சக நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள், தமிழர்களின் பாரம்பரிய உடையான வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையுடன் வந்திருந்தனர். பழைய மாணவர்கள் பலரும், அரசுத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களாகவும், சிலர் வியாபாரிகளாகவும் இருந்து வருகின்றனர். முன்னாள் மாணவர்களின் குடும்பத்தினருக்கு, கோலப்போட்டி, ஞாபகம் ஏற்படுத்தும் போட்டி என பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. சிறுவர் முதல் பெரியவர் வரை போட்டிகளில் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Updated On: 12 Oct 2021 6:55 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை
  2. சினிமா
    இளையராஜாவாக எப்படி நடிக்கப்போகிறேன்? தனுஷ் பெருமிதம்..!
  3. அரசியல்
    தேர்தல் பிரசாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா..!
  4. அரசியல்
    7 ஆண்டுகளாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத மயிலாடுதுறை காங்கிரஸ்...
  5. திருச்சிராப்பள்ளி
    திருச்சி தொகுதியில் 38 வேட்புமனுக்கள் ஏற்பு, 10 வேட்புமனுக்கள்...
  6. தேனி
    தமிழகத்தில் பாமக எவ்வளவு வலுவாக உள்ளது?
  7. தமிழ்நாடு
    எதிர்க்கட்சிகளை குறி பார்த்து அடிக்கும் பாஜக: அரசியல் விமர்சகர்கள்
  8. அரசியல்
    தென்சென்னையில் கரையேறுவாரா தமிழிசை?
  9. திருவண்ணாமலை
    தேர்தல் ஆணைய கைபேசி செயலி பயன்படுத்த ஆட்சியர் அறிவுரை
  10. காஞ்சிபுரம்
    சங்கரா கல்வி அறக்கட்டளை நிறுவனத்திற்கு தனியார் நிறுவனம் ரூ.1 கோடி...