/* */

காரியாபட்டியில் திருநங்கைகளுக்கு தானமாக வழங்கப்பட்ட பசுமாடுகள்

காரியாபட்டியில் திருநங்கைகளுக்கு தனியார் அறக்கட்டளை சார்பில் பசுமாடுகள் தானமாக வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

காரியாபட்டியில் திருநங்கைகளுக்கு தானமாக வழங்கப்பட்ட பசுமாடுகள்
X

காரியா பட்டியில் திருநங்கை ஒருவருக்கு பசுமாடு தானமாக வழங்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் முதன்முறையாக திருநங்கை களுக்கு வாழ்வாதாரத்திற்காக பசுமாடுகள் இன்பம் பவுண்டேசன் சார்பாக வழங்கப்பட்டது.

திருநங்கைகள் வாழ்வாதாரத்திற்காக மத்திய மாநில அரசுகள் சார்பாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டங்கள் திருநங்கைகள் பாலியல் தொழில் மற்றும் தவறான வழிகளில் செல்வதை மாற்றி அவர்களை நல்வழிப்படுத்தி வருகிறது. மேலும் அவர்களுக்கு மத்திய மாநில அரசு பணிகளில் வேலைவாய்ப்பும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி திருநங்கைகள் தற்போது தங்களது வாழ்க்கை பாதையை வெகுவாக மாற்றி சமுதாயத்தில் தங்களாலும் எல்லா வேலைகளையும் செய்ய முடியும் என நிரூபித்து வருகிறார்கள்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் இன்பம் பவுண்டேசன் பசித்தோருக்கு உணவளிக்கும் திட்டத்தின் சார்பாக பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்கள், கணவனை இழந்த பெண்கள் , மாற்றுதிறனாளிகள் ஆகியோர்களுக்கு பசுமாடு வளர்த்து தங்கள் வாழ்வாதாரத்தை பெருக்கி கொள்ள பசுதானம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

காரியாபட்டி இன்பம் பவுண்டேசன் சார்பாக இதுவரை 12- நபர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பசுமாடுகள் தானமாக வழங்கப்பட்டுள்ளது. கடந்த, தை அமாவாசை அன்று காரியாபட்டியில் தாய் - தந்தை இல்லாமல் தனிமையில் வாழ்ந்துவரும் திருநங்கை பழனியம்மாளின் குடும்ப சூழ்நிலை கருதி பசுமாடு மற்றும் கன்றுகுட்டியுடன் வழங்கும் நிகழ்ச்சி சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு , தானம் செய்யப்படவுள்ள பசுமாட்டின் பால் கறக்கப்பட்டு முருகப்பெருமானுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

அதன் பிறகு, பசுதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்பம் பவுண்டேசன் நிர்வாகிகள் விஜயகுமார், தமிழரசி ஆகியோர் பசுதானம் செய்தனர். இது குறித்து விஜயகுமார் கூறும்போது பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய வர்களுக்காக இந்த பசுதானம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றோம் மாற்றுதிறனாளிகள், விதவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். எங்கள் இந்த திட்டத்துக்கு விண்ணப்பம் செய்யும் நபர்களை நேரில் சென்று அவர்கள் மாடு வளர்க்க தகுதியானவர்களா என்பதை ஆய்வு செய்கிறோம். மேலும் தானம் செய்யும் பசுமாடுகளை விற்பனை செய்யக்கூடாது என்ற நிபந்தனைகளுடன் ஏழை மக்களுக்கு பசுதானம் செய்கின்றோம். தோணுகால் கிராமத்தில் ஒரே குடும்பத்தில் கண்பார்வையற்ற 2 நபர்களுக்கு கடந்த ஆண்டு பசுதானம் செய்யப்பட்டது.இந்த ஆண்டு அவர்களின் வாழ்க்கை தரம் உயர்ந்திருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தோம். இந்த அருமையான திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துவரும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்றனர்.

காரியாபட்டி இன்பம் பவுண்டேசன் சார்பாக வறுமையில் வாழும் திருநங்கை ஒருவருக்கு வாழ்வாதாரம் உயர்வதற்காக பசுதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 40க்கு மேற்பட்ட திருநங்கைகள் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிவில், அனைவருக்கும் அன்னதானம் மற்றும் பயனாளி பழனியம்மாளுக்கு வஸ்திரதானமும் செய்யப்பட்டது.

Updated On: 24 Jan 2023 10:44 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்