/* */

சதுரகிரி மலையில் நீரில் மூழ்கி மாணவர் உயிரிழப்பு

Chaturagiri mountain drowning student dies

HIGHLIGHTS

சதுரகிரி மலையில்  நீரில் மூழ்கி மாணவர் உயிரிழப்பு
X

சிவகாசியைச் சேர்ந்த கல்லூரி மாணவர், சதுரகிரிமலையில் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள ரிசர்வ்லைன், காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் கார்த்திகைமணி. இவர் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் முருகப்பன் (19). இவர் சிவகாசியில் உள்ள கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு முருகப்பன் தனது நண்பர்களுடன், சதுரகிரிமலைக்கு சென்றுள்ளார். அப்போது மலைக் கோவிலுக்குச் செல்லும் வழியில் உள்ள வழுக்குப்பாறை அருவி நீரோடை பகுதியில் தேங்கியிருந்த தண்ணீரில் இறங்கி குளித்துள்ளனர். திடீரென்று முருகப்பன் தண்ணீரில் மூழ்கினார். உடனடியாக அவருடன் சென்றவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வத்திராயிருப்பு தீயணைப்பு நிலைய வீரர்கள், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த முருகப்பன் உடலை மீட்டனர். இது குறித்து சாப்டூர் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 1 July 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  2. இந்தியா
    அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளருக்காக வாக்குச்சாவடி
  3. தஞ்சாவூர்
    இன்று தஞ்சை பெரியகோயில் சித்திரைத் தேரோட்டம் !
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  7. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 32 கன அடியாக அதிகரிப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    மனித நுண்ணறிவின் வகைகள்: தெரிந்துகொள்ளுங்கள்
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22 கன அடியாக அதிகரிப்பு
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் தொகுதியில் 68.26 சதவிகித வாக்குகள் பதிவு