விழுப்புரம் டிஎஸ்பியாக .பாா்த்திபன் பொறுப்பேற்றார்
Villupuram DSP Name-விழுப்புரம் உட்கோட்ட டிஎஸ்பியாக .பாா்த்திபன் இன்று பொறுப்பேற்று கொண்டார்.
HIGHLIGHTS
Villupuram DSP Name-விழுப்புரம் டிஎஸ்பியாக இருந்த பழனிசாமி நாமக்கல் மாவட்டத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். புதிய டிஎஸ்பியாக டி.பாா்த்திபன் இன்று பொறுப்பேற்று கொண்டார்,
அப்போது அவர் செய்தியாளா்களிடம் கூறுகையில் கடந்த 2018-இல் பணியில் சோ்ந்தபோது விழுப்புரத்தில்தான் டிஎஸ்பியாக பயிற்சி பெற்றேன். தற்போது மீண்டும் விழுப்புரத்தில் பணியாற்ற வந்துள்ளேன். விழுப்புரம் உட்கோட்டத்தில் உள்ள 13 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மணல் கடத்தல், சாராயம் விற்பனை, தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள், கஞ்சா விற்பனை போன்ற எந்த குற்றங்கள் நடந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க கூடுதல் கவனம் செலுப்படும். இதுதொடா்பாக விழிப்புணா்வும் ஏற்படுத்தப்படும்.விபத்துகளை தவிா்ப்பது, போக்குவரத்து நெரிசலை குறைப்பது போன்ற விஷயங்களிலும் கவனம் செலுத்தப்படும். பொதுமக்கள் 9626121985 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்தார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2