/* */

விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு விருது வழங்கிய மாற்றுத்திறனாளிகள்

விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியாவுக்கு மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் விருது வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு விருது வழங்கிய மாற்றுத்திறனாளிகள்
X

விழுப்புரம் சி.இ.ஓ கிருஷ்ணபிரியாவுக்கு மகளிர் தின விருது வழங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் விழுப்புரம் சமூக நல அமைப்புகளின் கூட்டமைப்பின் நிர்வாகியும், ஜே.ஆர்.சி மாவட்டக் கன்வீனர் முனைவர் ம. பாபு செல்வதுரை தலைமையில் மகளிர் தின விருது வழங்கும் விழா கோலியனூரில் நடைபெற்றது.

விழாவில் கொரோனா காலங்களில் விழிப்புணர்வு பணிகளில் சிறப்புடன் செயல்பட்ட மாவட்டத்தின் பெண் அலுவலர் என விழுப்புரம் சமூக நல அமைப்புகளின் கூட்டமைப்பினரால் விருதுக்கு தேர்வு செய்து, அந்த விருதினை புதிய அலை மாற்றுத்திறனாளி பெண்கள் அமைப்பின் மாவட்டச் செயலர் ஏ.தமிழரசி மகளிர் தின விருதினை சி.இ.ஒ கிருஷ்ணபிரியாவிற்கு வழங்கினார். அதனை பெற்று கொண்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா மாற்றுத்திறனாளி பெண்களுக்கு நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் சி.இ.ஓ. நேர்முக உதவியாளர்கள் ஆர்.செந்தில்குமார், இல.பெருமாள், மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர். தனவேல், ஆர்.பாக்கியலட்சுமி, டி.வெங்கடேசன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 11 March 2022 2:31 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  2. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  3. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  4. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  6. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  7. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  8. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்