/* */

விழுப்புரம் மாவட்ட எல்லப்பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் போலீசார் வாகன சோதனை

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை எல்லை பகுதியில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்ட எல்லப்பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் போலீசார் வாகன சோதனை
X

விழுப்புரம் மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை நேற்று இரவு எட்டு மணி முதல் வெள்ளிக்கிழமை இன்று அதிகாலை 5 மணி வரை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா தலைமையில் வாகன சோதனை நடவடிக்கை ஈடுபட்டனர்.

அப்போது தென் மாவட்டங்களில் இருந்து விழுப்புரம் மாவட்ட எல்லைக்குள் வந்த வாகனங்களும், புதுவையில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு வரும் வாகனங்களும், சென்னையிலிருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு வரும் வாகனங்களும், திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு வரும் வாகனங்களும், அந்தந்த சாலைகளிலும் மற்றும் சென்னை திருச்சி தேசிய 4 வழி சாலைகளின் எல்லையில் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னரே விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்டது.

திண்டிவனம் ஏ .டி. எஸ். பி,செஞ்சியில் டிஎஸ்பி, விழுப்புரம் டிஎஸ்பி ஆகியோர் தலைமையில் ஆங்காங்கே வாகன தணிக்கை செய்யப்பட்டது.

விழுப்புரம் டி.எஸ்பி. பார்த்திபன் தலைமையில் நள்ளிரவு 12 மணி அளவில் விழுப்புரம் நகரத்தில் சிக்னல் சந்திப்பிலும் அதனைத் தொடர்ந்து 2 மணி அளவில் கண்டமங்கலம் அருகிலும் 4 மணி அளவில் முகையூர் என்ற இடத்திலும், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஜானகிபுரம் என்ற இடத்திலும் வாகன தணிக்கை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 23 Sep 2022 12:40 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  3. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
  4. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  5. திருவண்ணாமலை
    மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்குச் சாவடிகளுக்கு செல்ல...
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தயார் நிலையில்...
  7. திருவண்ணாமலை
    12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்:...
  8. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச...
  9. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  10. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?