/* */

மேல்மலையனூரில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் காத்திருக்கும் போராட்டம்…

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 100 நாள் வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

மேல்மலையனூரில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் காத்திருக்கும் போராட்டம்…
X

மாற்றுத்திறனாளிகள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கடிக்குப்பம், பெருவளூர், நெச்சளூர் ஆகிய ஊராட்சிகளில் 100 நாள் வேலை வழங்க வலியுறுத்தி மேல்மலையனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு இன்று காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க வட்ட அமைப்பாளர் குமார் தலைமை வகித்தார். இதையெடுத்து, மேல்மலையனூர் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வளத்தி காவல் ஆய்வாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் உரிமைகளின் பாதுகாப்பு நல சங்கத்தினர் சார்பில் மாநில துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர் முத்துவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்ட செயலாளர் முருகன், வட்ட குழு ஏழுமலை, ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது, 100 நாள் வேலை தொடர்ந்து வழங்குவதாக எழுத்துப்பூர்வமாக எழுதி அதிகாரிகள் உறுதிமொழி அளித்தனர். அதனை ஏற்றுக் கொண்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் மற்றும் உரிமைகளின் பாதுகாப்பு நலச் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:

தமிழகத்தில் அரசின் திட்டங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்குவதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விருப்பம் இல்லாமல் செயல்படும் சூழ்நிலை விழுப்புரம் மாவட்டம் முழுவதும் இருந்து வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலையை வழங்க வேண்டிய பெரும்பாலான ஊராட்சிகள் அதனை மெத்தனப் போக்கில், மாற்றுத்திறனாளிகளை புறக்கணிக்கும் நோக்கத்தோடு பணி வழங்குவது இல்லை.

தற்போது, காத்திருப்பு போராட்டத்திற்கு பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விழித்துக் கொண்டது போல் விரைந்து வந்து அழைத்துப் பேசி 100 நாள் வேலை வழங்குவதாக உறுதியளிக்கிறார்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்குவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டக்கூடாது என தெரிவித்தனர்.

Updated On: 29 Nov 2022 2:27 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  2. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  3. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  4. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  5. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  6. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  10. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...