/* */

விழுப்புரம் அருகே விவசாயிடம் ரூ.1 லட்சம் மோசடி

விழுப்புரம் மாவட்டம், மொடையூரில் விவசாயிடம் ரூ. 1 லட்சம் மோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

விழுப்புரம் அருகே விவசாயிடம் ரூ.1 லட்சம் மோசடி
X

வங்கி மேலாளர் பேசுவதாக கூறி விவசாயியிடம் நூதன முறையில் ரூ.1 லட்சத்தை மோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த முடையூரை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 59), விவசாயி. கடந்த 14-ம் தேதியன்று இவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர், தான் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் மேலாளர் பேசுவதாகவும், உங்களுடைய ஏ.டி.எம். அட்டை திடீரென இயக்கம் இல்லாமல் போவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் புதிய ஏ.டி.எம். அட்டை வழங்க உங்களுடைய வங்கி கணக்கு எண், ஏ.டி.எம். அட்டை எண் உள்ளிட்ட விவரங்களை கேட்டார். இதை நம்பிய லட்சுமணன், வங்கி மேலாளர் தான் பேசுகிறார் என்று நம்பி தன்னுடைய விவரங்களை அனுப்பியுள்ளார். பின்னர் செல்போனுக்கு குறுந்தகவலாக வரும் ஓடிபி எண்ணை சொல்லுமாறு அந்த நபர் கூறியதன்பேரில் லட்சுமணன், தனது செல்போனுக்கு வந்த ஓடிபி எண்ணையும் கூறியுள்ளார்.

அடுத்த சில நிமிடங்களில் லட்சுமணன், கணக்கு வைத்திருக்கும் சித்தாமூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளையின் கணக்கில் இருந்து 4 தவணைகளாக ரூ.1 லட்சத்தை யாரோ மர்ம நபர் எடுத்துவிட்டதாக லட்சுமணனின் செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து காவல் ஆய்வாளர் பூங்கோதை, உதவி ஆய்வாளர் ரவிசங்கர் மற்றும் காவல்துறையினர் நூதன முறையில் பணத்தை மோசடி செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Updated On: 18 March 2023 9:03 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்