/* */

திருவக்கரை பகுதியில் உள்ள கல் மரங்கள் சுரண்டப்படுவதாக பொதுமக்கள் புகார்

விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை பகுதியில் உள்ள கல் மரங்களை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

HIGHLIGHTS

திருவக்கரை பகுதியில் உள்ள கல் மரங்கள் சுரண்டப்படுவதாக பொதுமக்கள் புகார்
X

திருவக்கரை கிராமத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள கல் மரங்கள்.

விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், புகழ்பெற்ற திருவக்கரை பகுதியில் தொடர்ந்து கல்மரங்கள் சுரண்டப்படுவதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டத்திற்கு உட்பட்டது திருவக்கரை. அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கல்மரங்கள் காணப்படுகின்றன. பாசில்வுட் எனப்படும் இந்த தொல்லுயிர் எச்சங்கள் 2 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டவை ஆகும். 1781-ல் ஐரோப்பிய விஞ்ஞானி சோனராட் என்பவரால் கண்டறியப்பட்டவை. இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் திருவக்கரை பகுதியில் மட்டுமே இப்படியான கல்மரங்கள் காண கிடைக்கின்றன. அறிவியல் அதிசயம் என உலகம் முழுவதும் உள்ள அறிவியலாளர்களால் திருவக்கரை கல்மரங்கள் கொண்டாடப்படுகிறது, அந்த பெருமைக்கு உரியது விழுப்புரம் மாவட்டம்.

இப்படிபட்ட வரலாற்று சிறப்புவாய்ந்த கல்மரங்களை பாதுகாக்க திருவக்கரையில் மத்திய அரசின் புவியியல் மற்றும் சுரங்கத்துறை சார்பில் தேசிய கல்மரப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.ஆனால் திருவக்கரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படும் கல்மரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் இங்குள்ள பகுதியில் கல்மரங்கள் தொடர்ந்து சுரண்டப்பட்டு வருகிறது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட வரலாறு பண்பாட்டு பேரவையினர் மாவட்ட ஆட்சியர் மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குனர் ஆகியோருக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருவக்கரை பகுதியில் உள்ள செம்மண் குவாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனும் கோரிக்கைகளை கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தின் பார்வைக்கு கொண்டு வந்தோம். இதனைத்தொடர்ந்து அப்போதைய கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா சிங், உடனடியாக திருவக்கரை பகுதியில் களஆய்வு செய்தார். இதுதொடர்பாக அவரது அறிக்கையின் மீதான தொடர் நடவடிக்கையாகவே திருவக்கரையில் தற்போது மாநில அரசின் புவியியல் மற்றும் சுரங்கத்துறை சார்பில் புவியியல் பூங்கா கட்டுமானப்பணிகள் நடந்து வருகின்றன. இது வரவேற்புக்குரியது.

ஆனாலும் திருவக்கரையை சுற்றியுள்ள கடகம்பட்டு, தொள்ளாமூர், கொண்டலாங்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் செம்மண் குவாரிகள் தொடர்ந்து இயங்கி வருகின்றன. அவற்றின் மூலமாக செம்மண் மட்டுமல்லாது கல்மரங்கள் எனப்படும் கனிமவளமும் தொடர்ந்து சுரண்டப்பட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது. இவை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். தற்போது மேற்பரப்பிலேயே காணப்படும் கல்மரங்களை சேகரித்து புதிதாக அமைக்கப்பட்டு வரும் புவியியல் பூங்கா வளாகத்தில் வைக்க வேண்டும்.

விழுப்புரம் மாவட்டம் முழுவதும் அல்லது வானூர் தாலுகாவில் உள்ள பள்ளி- கல்லூரி வளாகங்களில் கல்மரங்களை காட்சிப்படுத்தி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். இப்பகுதியில் இயங்கி வரும் செம்மண் குவாரிகளுக்கும் தடை விதிக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகமும், புவியியல் மற்றும் சுரங்கத்துறையும் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

Updated On: 16 Dec 2022 8:51 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் உயிரிழப்பு..!
  2. விளையாட்டு
    ஆர்சிபி வீரர்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்த்த தோனி! தேடிசென்று...
  3. இந்தியா
    ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் பேரணியில் பேசாமல் வெளியேறியது...
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  7. உலகம்
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்
  8. தேனி
    தேனி மாவட்டத்தில் பரவலாக மழை! அணைகளுக்கு நீர் வரத்து தொடக்கம்
  9. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருப்பரங்குன்றம்
    திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் அதிகரிக்கும் திருமணக் கூட்டம்..!