/* */

விழுப்புரம் அருகே ஜே.ஆர்.சி. சார்பில் மெட்ராஸ் ஐ விழிப்புணர்வு பிரச்சாரம்

விழுப்புரம் அருகே முட்டத்தூர் பள்ளியில் மெட்ராஸ் ஐ பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஜே.ஆர்.சி. அமைப்பினர் நடத்தினர்.

HIGHLIGHTS

விழுப்புரம் அருகே ஜே.ஆர்.சி. சார்பில் மெட்ராஸ் ஐ விழிப்புணர்வு பிரச்சாரம்
X

ஜே.ஆர்.சி. அமைப்பின் சார்பில் மெட்ராஸ் ஐ பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட ஜூனியர் ரெட்கிராஸ். சார்பில் முட்டத்தூர், ஒய்க்காப் மேல்நிலைப்பள்ளியில் மெட்ராஸ் ஐ கண் நோய் விழிப்புணர்வு பிரச்சாரம் தாளாளர் முனைவர். இ. ஸ்டான்லி ஜோன்ஸ் தலைமையில் நடைபெற்றது.

பள்ளியின் தலைமையாசிரியர் ஒய். ஜாக்குலின் ஆஷாத் முன்னிலையில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழுப்புரம் கல்வி மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட கன்வீனர் முனைவர். ம. பாபு செல்வதுரை இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இதில் மாணவ மாணவியர்கள் , ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு மெட்ராஸ் ஐ கண் நோய் குறித்து அலட்சியமும் அச்சமும் வேண்டாம் என்ற தலைப்பில் பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

மேலும் கண் நோயின் அறிகுறிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்,கையாளவேண்டிய வழிமுறைகள், மருத்துவ சிகிச்சை சார்ந்த தகவல்கள் அந் துண்டு பிரசுரத்தில் இடம்பெற்றிருந்தது.மேலும் இத்தகவலினை இதர மாணவர்களுக்கும், பகுதி வாழ் மக்களுக்கும் எடுத்துரைக்க அறிவுறுத்தினர். இதில் பள்ளி உதவி தலைமையாசிரியர். தடி. ஜேக்கப் ஜீவானந்தம். சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஜே.டேவிட் ஜெயபிரகாஷ். உடற்கல்வி ஆசிரியர் ஆர்.கே.செல்வகுமார், பட்டதாரி ஆசிரியர் ஜி. பிரேம்ராஜ்குமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இதேபோன்று ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பினர் மாவட்ட கன்வீனர் முனைவர் பாபு செல்வத்துரை தலைமையில் கொரோனா காலத்தில் கொரோனாவுக்கு எதிராக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வுகள் மக்களிடம் ஏற்படுத்தி மாவட்ட நிர்வாகத்திடம் பாராட்டுகளைப் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது மெட்ராஸ் ஐ நோய் வேகமாக பரவி வரும் நிலையில் அதனை தடுக்கும் பொருட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பொதுமக்களிடையே தொடர்ந்து நடத்தி வருகின்றனர். மெட்ராஸ் ஐ வந்துவிட்டால் அந்நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்கள் மாணவ மாணவிகள் கிராமங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவர்கள் இந்த விழிப்புணர்வு பணியை செய்து வருவது மக்கள் மத்தியில் பெரும் பாராட்டையும் வாழ்த்துக்களையும் பெற்று உள்ளது.

Updated On: 24 Nov 2022 10:07 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  2. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  3. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  4. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  5. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  6. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  7. வீடியோ
    சாம் பிட்ரோடா ஒரு பச்சை புளுகு மூட்டை ! இறங்கி அடித்த H ராஜா !...
  8. வீடியோ
    நிலை தடுமாறிய Amitshah ஹெலிகாப்டர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் !...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?