/* */

விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை: தயார் நிலையில் மீட்புக் குழு

விழுப்புரம் மாவட்டத்தில் கன மழை பெய்யும் என்ற வானிலை மையத்தின் எச்சரிக்கை தொடர்ந்து மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை: தயார் நிலையில்  மீட்புக் குழு
X

கனமழை எச்சரிக்கை காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதில் மீட்பு உபகரணங்களுடன் தீயணைப்பு வீரர்கள் தயார் படுத்தப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதன் அருகே உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அது புயலாக மாறும் என்று வானிலை மையம் கனித்துள்ளது. இதனால், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கனமழையால் ஏதேனும் பாதிப்புகள் நேராமல் தடுக்க தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் 1,500 போலீசார், தேவையான மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

இதேபோன்று, விழுப்புரம் தீயணைப்பு வீரர்கள் தேவையான மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். அவசர கால மீட்பு பணிக்கு தேவையான ரப்பர் படகுகள், டயர் டியூப்புகள், கயிறு, பொக்லைன் எந்திரம், ஜெனரேட்டர், மரம் வெட்டும் எந்திரங்கள், மண்வெட்டி, அரிவாள் உள்ளிட்ட பல்வேறு மீட்பு உபகரணங்களுடன் தங்களை தயார் படுத்திகொண்டு இருக்கிறார்கள். மேலும் மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதிகளான மரக்காணம், பொம்மையார்பாளையம், நடுக்குப்பம், கோட்டக்குப்பம், ஆரோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தனித்தனி குழுக்களாக முகாமிட்டு தங்கியுள்ளனர். அதுமட்டுமின்றி மழையால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ள பகுதிகளை கண்டறிந்து அப்பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோன்று கடந்து சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக ஏரி குளங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை அதிக அளவு பெய்ததால் அப்பொழுது மாவட்ட நிர்வாகத்தின் மிகப்பெரிய முயற்சியால் மீட்பு குழுவினர் ஆங்காங்கே விரைந்து சென்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததால் மாவட்டத்தின் அப்போது எந்த விதமான அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.

இது மக்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது நிம்மதி அடைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு புயல் ஏற்பட்டு வலுவிழந்தாலும் விழுப்புரம் மாவட்டத்திற்கு கனமழை பெய்யும் என எச்சரிக்கையை மாநில மையம் அறிவித்துள்ளதால் அதனை எதிர்கொள்ளும் வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் ஆபத்தான நீர் நிலைகள் மற்றும் அதிக அளவில் மழை பெய்யும் இடங்களில் மீட்பு குழுவினர் தயார்படுத்தப்பட்டு ஆங்காங்கே தயார் நிலையில் உள்ளனர் மேலும் மாவட்ட நிர்வாகம் மாவட்டத்தின் அனைத்து துறைகளையும் அனைத்து பகுதிகளிலும் கண்காணிக்க அறிவுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மாவட்டத்தில் கனமழை எதிர்கொள்ளும் வகையில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் ஊராட்சி நிலைகளில் அலுவலர்கள் தயார் நிலையில் நீர் நிலைகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 8 Dec 2022 5:14 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  2. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  3. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  4. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  5. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  6. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  7. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  8. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  9. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  10. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு