/* */

விழுப்புரத்தில் வளர்ச்சிப்பணிகள்; அமைச்சர் நேரு ஆய்வு

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நகராட்சி துறை அமைச்சர் நேரு தலைமையில் திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

விழுப்புரத்தில் வளர்ச்சிப்பணிகள்; அமைச்சர் நேரு ஆய்வு
X

நகராட்சி நிர்வாகத்துறை வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் நேரு தலைமையில் நடைபெற்றது.

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நகராட்சி நிர்வாகத்துறை வளர்ச்சிப்பணிகள் குறித்த நடைபெற்ற ஆய்வுக்கூட்டம் கூட்டத்திற்கு, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு தலைமை வகித்தார். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அரசு கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ்மீனா, கலெக்டர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழுப்புரம், திண்டிவனம், கோட்டக்குப்பம் ஆகிய நகராட்சிகள் மற்றும் வளவனூர், விக்கிரவாண்டி, செஞ்சி, திருவெண்ணெய்நல்லூர், அரகண்டநல்லூர் உள்ளிட்ட பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் நேரு ஆய்வு மேற்கொண்டார். அப்போது தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் நிலவரம், அப்பணிகள் எப்போது முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்ததோடு, மக்களுக்கான அடிப்படை வளர்ச்சிப்பணிகளை விரைந்து முடிக்கும்படி உத்தரவிட்டார்.

விழுப்புரம் நகராட்சியில் குடிநீர் திட்டங்கள், விரிவுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள், சாலைப்பணிகள், தூய்மை இந்தியா திட்டப்பணிகள், திண்டிவனம் நகராட்சியில் புதிய பேருந்து நிலைய பணிகள், வளர்ச்சிப்பணிகள் குறித்தும், அதேபோல் 'உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்' திட்டத்தின்கீழ் எம்.எல்.ஏ.க்கள் அளித்த 10 கோரிக்கைகளில் நகராட்சி பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், அத்திட்டங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் திட்டமதிப்பீடு தயாரிக்கவும் துறை அதிகாரிகளுக்கு, அமைச்சர் நேரு அறிவுறுத்தினார்.

அதேபோல் பேரூராட்சிகளில், மக்களுக்கு அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யும் வளர்ச்சித்திட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்தார். தொடர்ந்து, நகராட்சி, பேரூராட்சிகளில் என்னென்ன திட்டங்கள் தேவை என்று உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர் நேரு, படிப்படியாக அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றார்.

கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் பொன்னையா, பேரூராட்சி துறை ஆணையர் செல்வராஜ், குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலர் மு.பரமேஸ்வரி, விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் துரை.ரவிக்குமார், எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன், மணிக்கண்ணன், சிவக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறியதாவது;

விழுப்புரம் நகராட்சியில், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் 2024-ம் ஆண்டு மே மாதத்தில் முடிக்கப்படும். இப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 10 ஆண்டுகாலம் ஆகிவிட்டது. ஏற்கனவே ஒப்பந்தம் எடுத்தவர்கள், அப்பணியை சரிவர முடிக்கவில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு இருக்கிற ஒப்பந்ததாரர்களை அணுகி அப்பணிகளை முடுக்கி விட்டதன் விளைவாக, தற்போது 60 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. மீதம் இருக்கிற பணிகளை விரைவாக முடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திருக்கிறோம். ஏற்கனவே பாதாள சாக்கடை பணிகள் முடிந்த இடங்களில் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்ட பகுதிகளில், உடனடியாக சாலைப்பணிகள் மேற்கொள்ள முதல்கட்டமாக ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. விரைவில் சாலைப்பணிகள் முடிக்கப்படும்.

சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்ட பகுதிகளில், ஊழியர்களுக்கு எங்கும் ஊதிய நிலுவை கிடையாது. ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. எந்தெந்த இடத்தில் நகராட்சிகளில் அதிகாரிகள் பற்றாக்குறை இருக்கிறதோ அங்கு அதிகாரிகளை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. வெகு விரைவில் அதிகாரிகள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். விழுப்புரம் போன்ற நகராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்த 5 லட்சத்தில் இருந்து 7 லட்சம் வரை மக்கள் தொகை இருக்க வேண்டும். நகராட்சியில் இப்போது பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. 5 லட்சத்துக்கும் மேல் மக்கள் தொகை இருக்குமானால், அதைப்பற்றி சிந்திக்கலாம். முதல்-அமைச்சரின் அனுமதிபெற்று அதுபற்றி பார்க்கப்படும். நகராட்சியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள், குடிநீர் பணிகளை நிறைவேற்றுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. காவிரிநீர் திட்டம் காவிரி நீர் மூலம் வேலூர் மாவட்டத்தின் ஒரு பகுதி, திருவண்ணாமலை மாவட்டம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் ஒரு பகுதி, விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளும் பயன்பெறும் வகையில் ரூ.6,500 கோடி மதிப்பில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. நிதிக்காக உலக வங்கி, ஜெர்மன் வங்கிக்காக காத்திருக்கிறோம். நிதி வந்தவுடன் பணிகள் தொடங்கப்படும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Updated On: 2 Dec 2022 12:13 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மேஷ ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. திருவள்ளூர்
    புழலில் மர்மமான முறையில் சிறுமி உயிரிழப்பு..!
  3. சினிமா
    Thalaivar 171 Villain யாரு தெரியுமா? அட பெரிய நடிகராச்சே..!
  4. கன்னியாகுமரி
    ஒரே நேரத்தில் சூரியஅஸ்தமனம், சந்திரோதயம்! காணக் கிடைக்காத அபூர்வ...
  5. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 49 கன அடியாக அதிகரிப்பு..!
  6. இந்தியா
    நாட்டின் பணக்கார முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி! சொத்து மதிப்பு ஜஸ்ட்...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன‌ அடியாக நீடிப்பு
  9. தமிழ்நாடு
    கூடுதல் லீவு...! பள்ளி குழந்தைகளே.. உங்களுக்கு ஒரு ஜாலியான செய்தி..!
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்