Begin typing your search above and press return to search.
மணிலா விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்
விழுப்புரம் மாவட்டத்தில் மணிலா பயிர் செய்யும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார்.
HIGHLIGHTS
விழுப்புரம் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் மணிலா பயிரிட்டுள்ள விவசாயிகள், வரும் 31ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மோகன் தெரிவித்து உள்ளார்,
ஒரு ஏக்கர் மணிலா பயிருக்கு 540 ரூபாயும், கட்டணமாக செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம்.அரசு பொதுசேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து வரும் 31ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மோகன் கேட்டுக் கொண்டுள்ளார்.