/* */

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி
X

தீக்குளிக்க முயற்சித்த கண்ணன் குடும்பத்தினர்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட காணை ஒன்றியம், மாம்பழப்பட்டு கிராமம், தலித் பகுதியை சேர்ந்தவர் முத்து மகன் கண்ணன் வயது (35), அவரது மனைவி தேவகி வயது (30) மற்றும் மூன்று குழந்தைகளுடன் இன்று விழுப்புரத்தில் உள்ள விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.

அப்போது மனு கொடுக்க வந்த கண்ணன் குடும்பத்தினர் தங்கள் பையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை திடீரென எடுத்து தங்கள் தலை முதல் உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த உதவி ஆய்வாளர் முருகன் தலைமையிலான காவல்துறையினர் விரைந்து வந்து அவர்களை தடுத்து, அவர்கள் அனைவர் மீதும் அருகே இருந்த தீயணைப்பு வாகனத்தில் இருந்த தண்ணீரை ஊற்றி காப்பாற்றி, அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அதனால் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் நாள் இன்று என்பதால் அங்கு மனு கொடுக்க வந்த நூற்றுக்கணக்கான மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 20 Jun 2022 5:28 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  2. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  3. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  4. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  5. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  6. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  7. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  8. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  9. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!