/* */

அரசு பேருந்து நடத்துனர் மீது மாணவர் தாக்குதல் : போலீஸார் சமரசம்

விழுப்புரம் அருகே அரசு நகர பேருந்து நடத்துனரை மாணவர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது

HIGHLIGHTS

அரசு பேருந்து நடத்துனர் மீது மாணவர் தாக்குதல் : போலீஸார் சமரசம்
X

பைல் படம்

விழுப்புரத்தில் படிக்கட்டில் தொங்கியதை தட்டிக்கேட்ட அரசு பேருந்து நடத்துனரை கல்லூரி மாணவர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் பேருந்து நிலையத்தில் இருந்து கலித்திராம்பட்டுக்கு அரசு நகர பேருந்து ஒன்று புறப்பட்டு சென்று கொண்டு இருந்தது,. இந்த பேருந்து, புதுச்சேரி மார்க்கத்தில் ரெட்டியார் மில் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றுவதற்காக நிறுத்தப்பட்டது. அப்போது அந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து அரசு கல்லூரி மாணவர்கள் பலரும் ஏறினர். அவர்களில் சில மாணவர்கள், பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொண்டதாக தெரிகிறது.

இதைப் பார்த்த பேருந்து நடத்துனர் பெருங்கலாம்பூண்டி பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி (45) என்பவர், அந்த மாணவர்களிடம் பேருந்தின் உள்ளே வருமாறு கூறினார். ஆனால் அதை அம்மாணவர்கள் பொருட்படுத்தாமல் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்தனர். தொடர்ந்து, நடத்தினர் சொல்லிப்பார்த்தும் அந்த மாணவர்கள் கேட்கவில்லையாம்.

ஒருகட்டத்தில் பேருந்து நடத்துனரிடம் கல்லூரி மாணவர்கள் வாய்த்தகராறில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மாணவர், திடீரென பேருந்து நடத்துனர் கோவிந்தசாமியின் கன்னத்தில் அறை விட்டதாகக் கூறப்படுகிறது. உடனே அவர், பேருந்தை அங்கேயே நிறுத்தி அம்மாணவர்களை கீழே இறக்கிவிட்டு, இதுபற்றி நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து மாணவர்களிடமும், பேருந்து நடத்துனரிடமும் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு அங்கிருந்து அந்த பேருந்து புறப்பட்டுச் சென்றது. இந்த சம்பவத்தினால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 29 March 2023 7:45 AM GMT

Related News

Latest News

  1. டாக்டர் சார்
    மன அழுத்தம் மொத்த நோய்களுக்கும் வித்திடும்..!
  2. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்கள்...
  3. வீடியோ
    Setting Game விளையாடும் திமுக, அதிமுக குற்றச்சாட்டும் Annamalai...
  4. மதுரை மாநகர்
    மதுரையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு, அமைச்சர்...
  5. ஈரோடு
    பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் 40வது ஆண்டு விழா
  6. திருப்பரங்குன்றம்
    சோழவந்தானில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட விவசாயிகள் கோரிக்கை..!
  7. கல்வி
    ஒரு நாட்டுக்கு கஜானாவை விட உயர்ந்தது எது? அசந்து போவீங்க..!
  8. ஈரோடு
    மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதிகள்: ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர்...
  9. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் இவ்ளோ கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதலா..?...
  10. வீடியோ
    🔴LIVE :கன்னியாகுமரியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து சீமான்...