/* */

விக்கிரவாண்டி கடைவீதியில் 12 மணி நேர மின் நிறுத்தம்: வியாபாரிகள் வாக்குவாதம்

விழுப்புரம் மாவட்டம்,விக்கிரவாண்டியில் 12 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாலை மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

விக்கிரவாண்டி கடைவீதியில் 12 மணி நேர மின் நிறுத்தம்: வியாபாரிகள் வாக்குவாதம்
X

மின்வாரிய அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி கடைவீதியில் மழைநீர் வடிகால் வாய்க்கால் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக மின்கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை காலை 9 மணிக்கு மின்தடை ஏற்படுத்தி, மின்கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணி நடைபெற்றது. இரவு 9 மணியை கடந்தும் பணி முடியாததால் மின் விநியோகம் செய்யப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த வியாபாரிகள், பணி எப்போது முடியும், எத்தனை மணிக்கு மின் விநியோகம் செய்வீர்கள் என்று மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டனர். அதற்கு அதிகாரிகள், இன்னும் 2 மணி நேரம் ஆகும் என்று கூறினர்.

மின்வாரிய அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் திட்டமிட்டு பணியை மேற்கொள்ளாததாலும், குறைந்த பணியாளர்களை கொண்டு பணி செய்வதாலும் பணியை முடிப்பதில் காலதாமதம் ஏற்படுவதாகவும், உடனடியாக மின் விநியோகம் செய்யக்கோரியும் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் மறியலிலும் ஈடுபட முயன்றனர். இது குறித்து தகவல் அறிந்ததும் விக்கிரவாண்டி காவல் நிலைய போலீசார் மற்றும் பேரூராட்சி தலைவர் அப்துல் சலாம் விக்கிரவாண்டி கடைவீதிக்கு விரைந்து வந்தனர். அவர்கள் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, மின்வாரிய அதிகாரிகள் விரைந்து பணிகளை முடித்து மின் விநியோகம் செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இருப்பினும் இரவு 9.30 மணி வரை மின் சாரம் விநியோகிக்காததால் வியாபாரிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 26 March 2023 2:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி