/* */

வீடு புகுந்து கொள்ளையடித்த மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள பனையபுரம் கிராமத்தில் நள்ளிரவு வீடு புகுந்து கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

வீடு புகுந்து கொள்ளையடித்த மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
X

பைல் படம்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள பனையபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சிவப்பிரகாசம் (வயது 64). இவர் நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார்.

அப்போது நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவு உள்பக்க தாழ்பாளை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் வைத்திருந்த 14½ பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். சிவப்பிரகாசம் குடும்பத்தினர் காலையில் எழுந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.

இதனால் பதறிய சிவப்பிரகாசம் இதுபற்றி விக்கிரவாண்டி போலீசில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து, நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Updated On: 23 Sep 2022 12:50 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்