விக்கிரவாண்டியில் போலீசார் நடத்திய ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி
Helmet Awareness - விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் போக்குவரத்து போலீசார் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு குறித்த பேரணி நடைபெற்றது.
HIGHLIGHTS
Helmet Awareness - விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் மாவட்ட போக்குவரத்து காவல்துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமாரராஜா தலைமை தாங்கினார், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் போதை பொருள், புகையிலை ஒழிப்பு குறித்த உறுதிமொழியை ஏற்றனர்.
சப்-இன்ஸ்பெக்டர் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். வழிநெடுகிலும் ஹெல்மெட் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு எற்படுத்தினர். விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி சிறுவள்ளிக்குப்பம் கிராமத்தை சென்றடைந்தது. இதில் இளைஞர்கள் சங்கர், செல்வகுமார், சிவராஜ், போக்குவரத்து போலீஸ்காரர்கள் கலையரசன், நாகராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2