/* */

விக்கிரவாண்டியில் வேலை கேட்டு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விக்கிரவாண்டி பிடிஓ அலுவலகம் முன்பு வேலை கேட்டு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

விக்கிரவாண்டியில் வேலை கேட்டு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினரின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி, வானூர், கண்டமங்கலம் ஆகிய இடங்களில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நூறுநாள் வேலை கேட்டு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு ஆர்பாட்டம் நடைபெற்றது.

விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கே.சுந்தரமூர்த்தி தலைமையில் சிபிஎம் கட்சி ஒன்றிய செயலாளர் வி.கிருஷ்ணராஜ், விதொச மாவட்ட துணைச்செயலாளர் பி.கலியமூர்த்தி, ஒன்றிய நிர்வாகிகள் என்.குமார், ஏ.பிரேமா, பி.பாலமுருகன் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து நூறு நாள் வேலை கேட்டு கோரிக்கை மனுவை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கொடுத்தனர்.

Updated On: 28 Jun 2022 1:03 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?