/* */

விக்கிரவாண்டி பகுதியில் அரசு கலைக்கல்லூரி: சிபிஎம் கோரிக்கை

விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு கலைக்கல்லூரி வேண்டும் என சிபிஎம் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றினர்.

HIGHLIGHTS

விக்கிரவாண்டி பகுதியில்  அரசு கலைக்கல்லூரி: சிபிஎம் கோரிக்கை
X

கஞ்சனூரில் நடைபெற்ற  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விக்கிரவாண்டி ஒன்றிய 23-வது மாநாடு 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விக்கிரவாண்டி கிழக்கு, மேற்கு ஆகிய இரு ஒன்றிய 23-வது மாநாடு கஞ்சனூரில் நடைபெற்றது, மாநாட்டிற்கு எஸ்.ரமேஷ், ஜெயா ஆகியோர் தலைமை தாங்கினர், முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆர்.தண்டபாணி மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார்,

மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.ராதாகிருஷ்ணன், எஸ்.முத்துகுமரன் ஒன்றிய செயலாளர்கள் கிழக்கு வி.கிருஷ்ணராஜ், மேற்கு ஆர்.டி.முருகன் மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன், உறுப்பினர்கள் ஏ.சங்கரன், ஏ.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.சித்ரா ஆகியோர் உரையாற்றினர்

மாநாட்டில் விக்கிரவாண்டி பகுதியில் அரசு கலைக்கல்லூரி தொடங்க வேண்டும்,கல்வி கடன் வழங்க முகாம் நடத்த வேண்டும், அடிக்கடி விபத்து ஏற்படும் விக்கிரவாண்டி அண்ணா சிலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன,

தொடர்ந்து 9பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட்டு அதில் வி.கிருஷ்ணராஜ் ஒன்றிய செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

Updated On: 29 Nov 2021 2:56 PM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    திருவள்ளூர்; ஸ்ரீவைத்தி வீரராகவ பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  3. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோவிலில் வசந்த உற்சவத்தின் நிறைவாக மன்மத தகனம்
  4. சினிமா
    கூலி படத்துக்காக மரணம் வரை சென்று மீண்டு வந்த நடிகர் அமிதாப் பச்சன்!
  5. இந்தியா
    இயற்கை கடும் எச்சரிக்கை! வறட்சியை நோக்கிச் செல்லும் இந்தியா
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி விழா; இலட்சக்கணக்கில் குவிந்த...
  7. இந்தியா
    இன்னும் 5 நாள் வெளியே தலை காட்டாதீங்க...
  8. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  9. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  10. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்