/* */

தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி 21 வயது வாலிபர் பலி

விழுப்புரம் மாவட்டம், சொரணாவூர் அருகே ஆற்றில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாலிபரை சடலமாக மீட்டனர்

HIGHLIGHTS

தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி 21 வயது வாலிபர் பலி
X

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த வாலிபர் 

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே கண்டமங்கலம் ஒன்றியம், சொர்ணாவூர் அருகே செல்லும் தென் பெண்ணை ஆற்றில், கரையோர பகுதியான பாபுகுளம் பகுதியைச் சேர்ந்த சின்னா வயது 21 என்பவர், ஆற்றில் வந்த அதிகப்படியான தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு உயிர் இழந்தார்,

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கண்டமங்கலம் போலீசார், உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 6 Nov 2021 3:41 AM GMT

Related News