Begin typing your search above and press return to search.
வானூர் அருகே கோயில் கோபுர கலசம் திருட்டு: போலீசார் விசாரணை
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே கோயிலின் கோபுர கலசம் திருடப்பட்டதால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
HIGHLIGHTS
விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுகா ராய புதுப்பாக்கம் கிராமத்தில் பழமையான பொன்னியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு இந்த கோவிலின் கோபுரத்தில் இருந்த செம்பு கலசத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
பொதுமக்கள் இன்று காலை கோபுர கலசம் திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ராயபுதுப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ரவி சங்கர் கோட்டக்குப்பம் போலீசில் புகார் செய்தார்.
புகாரின்பேரில் போலீஸ் இ்ன்ஸ்பெக்டர் ராபின்சன் வழக்குப்பதிவு செய்து கோபுர கலசத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கோவில் கோபுர கலசம் திருடு போன சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.