/* */

விழுப்புரம் அருகே கடத்தல் ரேஷன் அரிசி மினி லாரியுடன் பறிமுதல்

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்தியவர்கள் அதிகாரிகளை கண்டவுடன் தப்பி ஓடினர்.

HIGHLIGHTS

விழுப்புரம் அருகே கடத்தல் ரேஷன்  அரிசி மினி லாரியுடன் பறிமுதல்
X

பைல் படம்.

விழுப்புரம் அருகே தைலாபுரம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வானூர் வட்ட வழங்கல் அலுவலர் ராமகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வெள்ளிக்கிழமை அதிகாரிகள் தைலாபுரம் மெயின்ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மினிலாரி ஒன்று வந்தது. ஆனால் அதிகாரிகளை பார்த்ததும் மினிலாரியில் இருந்தவர்கள் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டனர்.

உடனடியாக அதிகாரிகள் லாரியில் ஏறி சோதனை மேற்கொண்டனர். அந்த லாரியில் 102 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் எடை 5 டன் என தெரியவந்தது.

இந்த ரேஷன் அரிசி தைலாபுரம் பகுதியில் இருந்து சென்னைக்கு கடத்தி செல்ல இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ரேஷன் அரிசியை கடத்தி சென்றது யார்,எங்கிருந்து கடத்தி வந்தனர் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி புளிச்சப்பள்ளம் பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட லாரி கிளியனூர் போலீஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து இது குறித்து போலீசார் விசாரணை நடந்து வருகிறது.

Updated On: 23 Sep 2022 11:17 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி
  2. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை தினசரி ரயில் சேவை: மே 2 முதல் துவக்கம்
  3. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  4. திருவண்ணாமலை
    சுட்டெரிக்கும் வெயிலில் கிரிவலப் பாதை தூய்மைப் பணியில் ஈடுபட்ட தூய்மை...
  5. நாமக்கல்
    அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜே.இ.இ., முதன்மை தேர்வுக்கான புத்தங்கள்...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கூடுதல் பேருந்துகள் இல்லாததால் பக்தர்கள் அவதி
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி : 2ம் நாளான நேற்று ஆயிரக்கணக்கில்...
  9. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  10. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி