/* */

15 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம்: போலீஸ் விசாரணை

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே 15 வயது சிறுமியை கடத்தி சென்ற வரை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

15 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம்: போலீஸ் விசாரணை
X

பைல் படம்

திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுமியை கடத்தி சென்றவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள காந்திக்குப்பம் பகுதியை சேர்ந்த 15 வயதுடைய சிறுமி 9-ம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். சம்பவத்தன்று வீட்டிலிருந்து வெளியே சென்ற சிறுமி, வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லையாம்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அந்த புகாரில், தங்கள் மகளை பக்கத்து தெருவை சேர்ந்த சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூ வியாபாரம் செய்து வரும் இளைஞர் ஆசைவார்த்தை கூறி கடத்திச்சென்று விட்டதாக கூறியிருந்தனர்.

இது குறித்து புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட சிறுமியையும், அவரை கடத்திச்சென்ற இளைஞரையும் தேடி வருகின்றனர்.

Updated On: 16 Sep 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்