/* */

இரட்டை இலை சின்னம் முடக்கம் ஏன்? திண்டிவனத்தில் சசிகலா பரபரப்பு பேச்சு

இரட்டை இலை சின்னம் முடக்கம் ஏன்? என திண்டிவனத்தில் சசிகலா பரபரப்பாக பேசினார்.

HIGHLIGHTS

இரட்டை இலை சின்னம் முடக்கம் ஏன்? திண்டிவனத்தில் சசிகலா பரபரப்பு பேச்சு
X

சசிகலா

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே மன்னார்சாமி கோயில் பகுதியில் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் சசிகலா பேசினார். அவர் பேசுகையில் எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க.வை 3வது பெரிய கட்சியாக மாற்றியவர் ஜெயலலிதா. பசுத்தோல் போர்த்திய புலிகளின் கையில் சிக்கி அ.தி.மு.க. சின்னாபின்னமாகி வருகிறது.

உள்ளாட்சி இடைத்தேர்தலில் இரட்டை இலை இல்லாமல் போட்டியிட யார் அதிகாரம் கொடுத்தது? தனிப்பட்ட ஒரு சிலரின் சுயநலத்தால் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட முடியாத சூழ்நிலைக்கு தொண்டர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

அ.தி.மு.க.வில் நடப்பதை பார்த்து தி.மு.க.வினர் ஆனந்தமாக உள்ளனர். சிலர் உயர் பதவியில் நீடிப்பதற்காக சூழ்ச்சிகளை செய்து வருகின்றனர். சொந்த வீட்டிற்கே சூனியம் வைத்து விட்டார்கள். தனிப்பட்டவர்களின் சுயநலத்தால் இரட்டை இலைச் சின்னம் முடங்கி உள்ளது.

ஆண்டுக்கு ஒருமுறை அவரவர் விருப்பத்திற்கு கட்சியின் சட்ட விதிகளை மாற்ற, யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை. எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க.வின் சட்டத்திட்டங்களில் திருத்தம் செய்ய எந்த தொண்டரும் விரும்பவில்லை என்றார்.

Updated On: 5 July 2022 4:12 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  2. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  3. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  4. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  5. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  6. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  7. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  8. தொண்டாமுத்தூர்
    நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...
  9. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  10. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே விநாயகர், கருப்பச்சாமி கோவில் பெருந் திருவிழா