/* */

திண்டிவனம் அருகே டாஸ்மாக் ஊழியரிடம் ரூ.1.20 லட்சம் பணம் வழிப்பறி

விழுப்புரம் மாவட்டம்திண்டிவனம் அருகே டாஸ்மாக் ஊழியரிடம் இருந்து ரூ.1.20 லட்சம் பணம் வழிப்பறி செய்யப்பட்டது.

HIGHLIGHTS

திண்டிவனம் அருகே டாஸ்மாக் ஊழியரிடம் ரூ.1.20 லட்சம்  பணம் வழிப்பறி
X

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கொந்தமூர் கிராமம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 46). இவர் சாரம் - ஈச்சேரி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். ரமேஷ் விற்பனையான பணம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் சாரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அங்காளம்மன் கோவில் அருகே சென்றபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள், ரமேஷ் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதினர். இதில் ரமேஷ், நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதையடுத்து ரமேசிடம் இருந்த பணம், டாஸ்மாக் கடை சாவி, அவருடைய மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை அந்த 2 மர்மநபர்கள் பறித்து கொண்டு தப்பி சென்றதாக தெரிகிறது. இதில் காயமடைந்த ரமேஷ் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த ஒலக்கூர் காவல் நிலைய போலீசார் அவரிடம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர், தொடர்ந்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் டாஸ்மாக் கடையின் சாவியை மர்ம நபர்கள் எடுத்து சென்றதால் அந்த கடைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Updated On: 11 July 2022 8:49 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  8. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  9. தமிழ்நாடு
    திருச்சி உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜர்
  10. தொண்டாமுத்தூர்
    நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...