Begin typing your search above and press return to search.
நத்தை மேடுபகுதி நரிக்குறவர் இன மக்களுக்கு இலவச மனைப்பட்டா கிடைக்குமா?
திண்டிவனக் அருகே நத்தை மேடு பகுதியில் இடவசதி இல்லாததால் நெருக்கமாக வசிக்கும் நரிக்குறவர் இன மக்களுக்கு இலவச மனைப்பட்டா கிடைக்குமா?
HIGHLIGHTS
விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் நத்தை மேடுப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் இனமக்கள் வாழ்ந்து வருகின்றனர், இவர்களுக்கு அங்கு போதுமான அளவு வீடு இல்லாமல், ஒரே குடிசையில் மூன்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள், அதில் சுமார் 10 க்கும் மேற்பட்ட வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் கணவன் மனைவி என சமூக இடைவெளி இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்,
அதன் காரணமாக கொரோனா நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர். அரசின் இலவச வீட்டு மனை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.