/* */

திண்டிவனம் அருகே ஆம்புலன்ஸ் மரத்தில் மோதி விபத்து

திண்டிவனம் அருகே வெடி விபத்தில் காயம் அடைந்தவரை ஏற்றி சென்ற 108 ஆம்புலன்ஸ் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

HIGHLIGHTS

திண்டிவனம் அருகே ஆம்புலன்ஸ் மரத்தில் மோதி விபத்து
X

மரத்தில் மோதி ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளானது.

கடலூர் மாவட்டம் ஆதிவராகநல்லூரை சேர்ந்தவர் பாலமுருகன். வெடிவிபத்தில் காயமடைந்த இவர், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் உறவினர்கள் அழைத்து சென்றனர். ஆம்புலன்சை சிதம்பரம் அடுத்த கூலாபாடியை சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவர் ஓட்டி வந்தார்.

திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ், சாலையோர மரத்தில் மோதியதால் முன்பகுதி சேதமானது. இதில் ஆம்புலன்சில் வந்த துளசிராமன், பாலமுருகன் உறவினர் நாகவள்ளி ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

பின்னர் மாற்று ஆம்புலன்சில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 15 Aug 2022 4:48 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  2. கோவை மாநகர்
    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில்...
  3. கோவை மாநகர்
    ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி குறித்த...
  4. லைஃப்ஸ்டைல்
    செரிமான பிரச்சனையா? சாப்பிட்ட பின் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
  6. ஆன்மீகம்
    குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் மே1-ல் குரு பெயர்ச்சி...
  7. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  8. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  9. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  10. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்