/* */

செஞ்சி காவல்துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு வாகன பேரணி

Helmet Awareness - விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

HIGHLIGHTS

செஞ்சி  காவல்துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு  வாகன   பேரணி
X

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் காவல்துறை மற்றும் மெக்கானிக் சங்கம் இணைந்து நடத்திய ஹெல்மெட் விழிப்புணர்வு வாகனப்பேரணி

Helmet Awareness -விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி போக்குவரத்து காவல்துறை, செஞ்சி காவல்துறை மற்றும் ராயல் மெக்கானிக் சங்கம் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு மற்றும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி செஞ்சியில் நடைபெற்றது.

இதற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் அப்பாண்டைராஜன் தலைமை தாங்கினார். இதில் வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் முருகவேல் கலந்துகொண்டு மோட்டார் சைக்கிள் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்து ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும், போதை பொருளை தடுக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து விளக்கி பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பேரணியில் போலீசார் உள்ளிட்ட அனைவரும் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் முக்கிய வீதிகள் வழியாக சென்று வந்தனர். இதில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பலராமன், முருகன், மோட்டார் வாகன பழுது பார்ப்போர் நலசங்கம் ரமேஷ் மற்றும் மெக்கானிக் சங்கத்தை சேர்ந்தவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 22 Aug 2022 11:17 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்