/* */

தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க தொடர்பு எண் வெளியீடு

விழுப்புரம் மாவட்டத்தில் நடக்கவுள்ள தேர்தல் குறித்த புகார்களை பொதுமக்கள் தேர்தல் பார்வையாளரிடம் அலைபேசியிலும், நேரிலும் தெரிவிக்கலாம்

HIGHLIGHTS

தேர்தல் தொடர்பான புகார்களை  தெரிவிக்க தொடர்பு எண் வெளியீடு
X

விழுப்புரம் கலெக்டர் மோகன் 

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான தகவல் மற்றும் புகார்களை விழுப்புரம் மாவட்ட நகர்ப்புற தேர்தல் பார்வையாளரிடம் தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலரும்,மாவட்ட கலெக்டருமான த.மோகன் தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள செய்தி குறிப்பில், விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தலுக்கான விழுப்புரம் மாவட்ட தேர்தல் பார்வையாளராக லஷ்மியை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் நியமனம் செய்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் தொடர்பான தகவல் மற்றும் புகார்களை 88075 66518 என்ற அலைபேசி எண் வாயிலாக தெரிவிக்கலாம்,

மேலும், பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் தேர்தல் தொடர்பான தகவல் மற்றும் புகார்களை தேர்தல் பார்வையாளரிடம் நேரில் தெரிவிக்க, விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அறை எண்: 09-ல் மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை தெரிவிக்கலாம் என கூறியுள்ளார்

Updated On: 5 Feb 2022 1:20 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்