/* */

குடியரசுத் தின விழா அலங்கார ஊர்தி வேலூர் மாவட்டம் வருகை

சென்னையில் நடைபெற்ற 73வது குடியரசுத் தின விழாவில் பங்கேற்ற வீரமங்கை வேலுநாச்சியர் அலங்கார ஊர்தி வேலூர் மாவட்டம் வந்துள்ளது

HIGHLIGHTS

குடியரசுத் தின விழா அலங்கார ஊர்தி வேலூர் மாவட்டம் வருகை
X

வேலூர் மாவட்ட எல்லையான மாதனூர் அருகே அலங்கார ஊர்திக்கு மலர்தூவி வரவேற்ற கலெக்டர் குமாரவேல் பாண்டியன்  

சென்னை குடியரசு தினவிழாவில் பங்கேற்ற வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி, " விடுதலைப் போரில் தமிழகம்" என்ற தலைப்பில் இந்திய விடுதலைக்குப் பாடுபட்ட தமிழக வீரர்களின் பெருமைகளை விளக்கும் வகையில் அமைக்கப்பட்ட அலங்கார ஊர்தி திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து இன்று மாலை வேலூர் வந்தடைந்தது.

வேலூர் மாவட்ட எல்லையான மாதனூர் அருகே கூத்தபாக்கம் என்ற பகுதியில் அலங்கார ஊர்தி வந்தபோது மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன், வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் ஆனி .விஜயா,மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா,மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்று அலங்கார ஊர்தியை மேளதாளங்கள் முழங்க மலர் தூவி வரவேற்றனர்.

இந்த வாகன ஊர்தி நாளை அணைக்கட்டு ஒன்றியம், கழனிபாக்கம் ஊராட்சி மற்றும் காட்பாடி ஒன்றியம், மேல்பாடி ஊராட்சி, வள்ளிமலை பகுதியிலும் பொதுமக்களும் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களும் கொரோனா நோய்த்தொற்று வழிகாட்டு நெறிமுறைகளுடன் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Updated On: 13 Feb 2022 2:46 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    யாரிந்த ராஜா வெற்றி பிரபு..?
  2. லைஃப்ஸ்டைல்
    நண்பனே... எனது உயிர் நண்பனே ! நீண்ட நாள் உறவிது.. இன்று போல் என்றுமே...
  3. லைஃப்ஸ்டைல்
    உறவுகளை எப்படி வகைப்படுத்தலாம்..? தெரிஞ்சுக்கங்க..!
  4. திருவண்ணாமலை
    போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, கூலிங் கிளாஸ் வழங்கிய போலீஸ்
  5. வீடியோ
    பிரதமராக மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுக்க காரணம்?#annamalai #annamalaibjp...
  6. இந்தியா
    இந்தியாவில் உள்ள ரவுடி இடங்கள் குறித்து தெரிந்துக்கொள்வோமா?
  7. லைஃப்ஸ்டைல்
    எதிர்பார்ப்பு நிறைவேறாவிட்டால், ஏமாற்றமே..!
  8. பொன்னேரி
    பொன்னேரி அருகே நடந்த கொலை கொள்ளை வழக்கில் 6 மணி நேரத்தில் இளைஞர் கைது
  9. கரூர்
    டெண்டர் நோட்டீஸ் நகலை காண்பித்து வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர்...
  10. ஈரோடு
    தாளவாடி அருகே அரசு பேருந்து பயணிகளை மிரட்டிய ஒற்றை காட்டு யானை