/* */

அதிமுக கூட்டணி வேட்பாளர் மீது வழக்கு பதிவு

அனுமதி இன்றி கூட்டம் நடத்தியதால் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் மீது வழக்கு பதிவு.

HIGHLIGHTS

அதிமுக கூட்டணி வேட்பாளர் மீது வழக்கு பதிவு
X

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் (தனி) சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளராக புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை. ஜெகன்மூர்த்தி போட்டியிடுகிறார்.

இதனிடையே நேற்று முன்தினம்(13.03.2021) கே.வி.குப்பம் சந்தை மேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் கூட்டணி கட்சியான பா.ம.க ஏற்பாடு செய்திருந்த ஆலோசனை கூட்டத்தில், வேட்பாளர் ஜெகன்மூர்த்தி பங்கேற்று பேசினார். தேர்தல் விதி முறைப்படி அனுமதி பெறாமல் நடந்த ஆலோசனைக் கூட்டம் என்பதால் தேர்தல் நடத்தை விதிமீறல் எனக்கூறி, வேலூர் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் விக்னேஷ் கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வேட்பாளர் ஜெகன் மூர்த்தி மற்றும் தனியார் மண்டப உரிமையாளர் சதீஷ்குமார் ஆகிய 2 பேர் மீது கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 15 March 2021 6:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  2. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  3. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  4. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  5. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  7. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்