/* */

மாணவி கடத்தல் : போக்சோ சட்டத்தில் 2 பேர் கைது

காதல் வார்த்தை கூறி, 11-ம் வகுப்பு பள்ளி மாணவியை கடத்திய இளைஞரும், உடந்தையாக செயல்பட்ட நபரும் போக்சோ சட்டத்தில் கைது.

HIGHLIGHTS

மாணவி கடத்தல் : போக்சோ சட்டத்தில் 2 பேர்  கைது
X

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த கீழ்விலாச்சூர் பகுதியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவியை (16) காணவில்லை, என அவரது பெற்றோர் கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

இந்த புகார் குறித்து விசாரணை மேற்கொண்ட கே.வி.குப்பம் காவல் துறையினர் மாணவியை தீவிரமாக தேடி வந்தனர். விசாரணையில், அந்த பள்ளி மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அதே பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் முத்துக்குமரன் (24) என்பவர் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து கே.வி.குப்பம் அருகே முத்துக்குமரன் மற்றும் கடத்தப்பட்டதாக கூறப்படும் பள்ளி மாணவி ஆகிய இருவரை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

மாணவியை கடத்த முத்துக்குமார் மற்றும் அவருக்கு உதவியதாக ஒடுகத்தூர் பகுதியை சேர்ந்த, ராணுவ வீரரான வினோத்குமார் (25) இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 7 March 2021 1:01 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தோல்வியுறும்போதுதான் காதல்கூட வெற்றி பெறுகிறது..!
  2. லைஃப்ஸ்டைல்
    இரு விழிகள் எழுதும் ஒரு புதிய கவிதை, காதல்..!
  3. லைஃப்ஸ்டைல்
    மகளின் முதல் ஹீரோ, 'அப்பா'.!
  4. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரம்: 59.55 சதவீதம்...
  5. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மாலை 3 மணி நிலவரப்படி 54.13 சதவீத...
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே வாக்களிக்க வரிசையில் நின்ற மூதாட்டி மயங்கி விழுந்ததால்...
  7. லைஃப்ஸ்டைல்
    பிரெண்டி உள்ள பையனுக்கு லைப் கேரண்டி உண்டு..!
  8. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  9. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்கு அளித்தார்...!