/* */

குடியாத்தத்தில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

மதுக்கடைகளை மூட வலியுறுத்தி பாமகவினர் சாலையில் மதுவை கொட்டியும், மதுபாட்டில்களை உடைத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்

HIGHLIGHTS

குடியாத்தத்தில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
X

மதுக்கடைகளை மூட வலியுறுத்தி குடியாத்தத்தில் பாமகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்

கடந்த 14:ம் தேதி முதல் தமிழக அரசு டாஸ்மாக் மதுபான கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளது. டாஸ்மாக் மதுபான கடைகள் திறப்பதினால் நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதால், உடனடியாக டாஸ்மாக் மதுபான கடைகளை உடனடியாக மூட வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக மாவட்ட செயலாளர் ரவி தலைமையில் குடியாத்தம் சித்தூர்கேட் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

அப்பொழுது மதுக்கடைகளை மூட வலியுறுத்தியும், மதுக்கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் மது வகைகளை சாலையில் கொட்டியும் மதுபாட்டில்களை சாலையில் உடைத்தும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு சித்தூர் கேட் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Updated On: 17 Jun 2021 11:17 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதாபாத்திரங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    கிரஷ் என்பதும் காதல் என்பதும் ஒன்றா? அல்லது இரண்டிற்கும் வித்தியாசம்...
  3. டாக்டர் சார்
    மன அழுத்தம் மொத்த நோய்களுக்கும் வித்திடும்..!
  4. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்கள்...
  5. வீடியோ
    Setting Game விளையாடும் திமுக, அதிமுக குற்றச்சாட்டும் Annamalai...
  6. மதுரை மாநகர்
    மதுரையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு, அமைச்சர்...
  7. ஈரோடு
    பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் 40வது ஆண்டு விழா
  8. திருப்பரங்குன்றம்
    சோழவந்தானில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட விவசாயிகள் கோரிக்கை..!
  9. கல்வி
    ஒரு நாட்டுக்கு கஜானாவை விட உயர்ந்தது எது? அசந்து போவீங்க..!
  10. ஈரோடு
    மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதிகள்: ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர்...