/* */

சரக்கு வேனில் கடத்தி வந்த குட்கா பறிமுதல்: 2 வாலிபர்கள் கைது

வேலூர் அருகே வேனில் தவிடு மூட்டைகளுக்கு அடியில் குட்கா கடத்தி வந்த இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர், டிரைவர் தப்பியோட்டம்

HIGHLIGHTS

சரக்கு வேனில் கடத்தி வந்த குட்கா பறிமுதல்: 2 வாலிபர்கள் கைது
X

பறிமுதல் செய்யப்பட்ட வேன்

பெங்களுரில் இருந்து சென்னைக்கு குட்கா கடத்தி வருவதாக பள்ளிகொண்டா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்குள்ள சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூரில் இருந்து வேலூர் நோக்கி வந்த வேனை நிறுத்த முயன்றபோது, வேன் டிரைவர் வேனை சிறிது தூரம் தள்ளி நிறுத்தி விட்டு தப்பி ஓடினார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வேனில் சோதனை செய்தபோது, வேனில் தவிடு மூட்டைகளுக்கு அடியில் குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது

வேனில் இருந்தவர்களை கைது செய்து விசாரித்ததில் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை சேர்ந்த சக்திவேல் (வயது 22), செட்டி பள்ளியை சேர்ந்த வேல்முருகன்(24) என தெரியவந்தது.

கைப்பற்றிய குட்காவின் மதிப்பு சுமார் 5 லட்சம் என்றும்,பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

Updated On: 15 May 2022 7:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  2. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  3. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  4. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  5. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  6. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  7. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  8. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  9. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  10. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...