/* */

மாயமான இளம்பெண்ணை மீட்டுத்தர கோரி காவல் நிலையம் முற்றுகை

மாயமான இளம்பெண்ணை மீட்டுத்தர கோரி அணைக்கட்டு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட மலைவாழ் மக்கள்.

HIGHLIGHTS

மாயமான இளம்பெண்ணை மீட்டுத்தர கோரி காவல் நிலையம் முற்றுகை
X

மாயமான இளம்பெண்ணை மீட்டுத்தர கோரி அணைக்கட்டு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட மலைவாழ் மக்கள்

அணைக்கட்டை அடுத்த மலைக் கிராமமான வாழைப்பந்தல் பகுதியைச் சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண்ணும் அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 36) என்பவரும் காதலித்து வந்ததாகத் தெரிகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீ்ட்டில் இருந்து வெளியில் சென்ற இளம்பெண் பின்னர் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் அணைக்கட்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதில், கிருஷ்ணமூர்த்தி என்பவர் எனது மகளின் மனதை மாற்றி கடத்தி சென்று எங்கேயோ மறைத்து வைத்துள்ளார். எனது மகளை மீட்டு தருமாறு கேட்டுக் கொள்கிறோம், எனத் தெரிவித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வந்தனர். ஆனால் அவரை காணவில்லை.

இந்தநிலையில் இளம்பெண்ணின் பெற்றோரும், உறவினர்களும் என 20க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து அணைக்கட்டு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது மலைவாழ் மக்கள், காணாமல் போன இளம்பெண்ணை விரைவில் மீட்டுத்தரக் கோரி போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 8 Jun 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வரும் 27 முதல் ஜூன் 3 வரை நீச்சல் பயிற்சி; விருப்பம் உள்ளவர்களுக்கு...
  2. திருவண்ணாமலை
    வெப்ப அலை; பகல் நேரத்தில் வெளியில் வர வேண்டாம் என கலெக்டர் வேண்டுகோள்
  3. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் குப்பைகள் உடனுக்குடன் அகற்றம்; கலெக்டர் ஆய்வு
  4. பொன்னேரி
    குண்ணமஞ்சேரி முத்துமாரியம்மன் கோவில் பால்குட ஊர்வலம்
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர்; ஸ்ரீவைத்தி வீரராகவ பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  7. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோவிலில் வசந்த உற்சவத்தின் நிறைவாக மன்மத தகனம்
  8. சினிமா
    கூலி படத்துக்காக மரணம் வரை சென்று மீண்டு வந்த நடிகர் அமிதாப் பச்சன்!
  9. இந்தியா
    இயற்கை கடும் எச்சரிக்கை! வறட்சியை நோக்கிச் செல்லும் இந்தியா
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி விழா; இலட்சக்கணக்கில் குவிந்த...