/* */

அணைக்கட்டுஅருகே இருதரப்பினருக்கிடையே மோதல் 7 பேர் மீது வழக்கு

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே நிலத்தில் பைப் புதைப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது

HIGHLIGHTS

அணைக்கட்டுஅருகே  இருதரப்பினருக்கிடையே மோதல் 7 பேர் மீது வழக்கு
X

அணைக்கட்டு தாலுகா பெரிய ஊணை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கேசவன். இவரது நிலமும், அதே கிராமத்தை சேர்ந்த உறவினர் துரை என்பவரது நிலமும் அருகருகே உள்ளது. இந்த நிலத்தில் உள்ள வழி பிரச்னை தொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில், கேசவன் கடந்த 18ம் தேதி நிலத்தின் நடுவே உள்ள வழியை தோண்டி அதில் தண்ணீர் செல்லும் பைப் லைன் புதைத்துள்ளார். இதைப்பார்த்த துரை பைப் லைன் புதைக்க எதிர்ப்பு தெரிவித்தார். இதில் இருதரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

இதையடுத்து இரு தரப்பினரும் அணைக்கட்டு போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் விதமாக விசாரணை நடத்தி ஆர்டிஓவுக்கு மனு அனுப்பினர் .

இதையடுத்து கேசவன் அளித்த புகாரின்பேரில், துரை தரப்பினர் 4 பேர் மீதும் துரை அளித்த புகாரின் பேரில் கேசவன் தரப்பை சேர்ந்த 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Updated On: 24 July 2021 1:14 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மகளின் முதல் ஹீரோ, 'அப்பா'.!
  2. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மாலை 3 மணி நிலவரப்படி 54.13 சதவீத...
  3. லைஃப்ஸ்டைல்
    பிரெண்டி உள்ள பையனுக்கு லைப் கேரண்டி உண்டு..!
  4. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  5. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
  6. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்கு அளித்தார்...!
  7. ஈரோடு
    கொளுத்தும் வெயில்: ஈரோடு தொகுதியில் 1 மணி வரை 42.23 சதவீத...
  8. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மதியம் 1 மணிக்கு 46.31 சதவீதம்...
  9. லைஃப்ஸ்டைல்
    உங்களை அடையாளப்படுத்த உங்கள் நடத்தையே காரணி..!
  10. லைஃப்ஸ்டைல்
    குடும்ப குதூகலத்தின் புன்னகைப்பூக்கள், உறவுகள்..!