/* */

பள்ளிகொண்டா ஏரி கால்வாயில் உடைப்பு : குடியிருப்பு பகுதியில் வெள்ளம்

பள்ளிகொண்டா ஏரி கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு, குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி

HIGHLIGHTS

பள்ளிகொண்டா ஏரி கால்வாயில் உடைப்பு : குடியிருப்பு பகுதியில் வெள்ளம்
X

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

கடந்த 20 நாட்களாக வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் மோர்தானா அணை நிரம்பி, அதன் இணைப்பு கால்வாய்களில் அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்படுவதால், கரைகள் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பள்ளிகொண்டா ரங்கநாதர் கோவில் பின்புறம் உள்ள ரங்கநாதர் நகர் குடியிருப்பு பகுதியில் மழை நீர் புகுந்தது. மேலும் மோர்தானா கால்வாய் அருகே செல்லும் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு அந்த நீரும் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியேற முடியாமல் அவதியடைந்தனர்.

தகவலறிந்ததும் பள்ளிகொண்டா பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டார். கலெக்டர் குமராவேல் பாண்டியன், சப்-கலெக்டர், அணைக்கட்டு வட்டாட்சியர், பொதுப்பணித்துறை அதிகார்கள் உள்ளிட்டோர் மோர்தானா கால்வாயை ஆய்வு செய்தனர். அப்போது கால்வாய் கரைகளை சீரமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் ரங்கநாதர் நகரில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் படி உத்தரவிட்டார்.

Updated On: 14 Oct 2021 4:23 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  2. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  3. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  4. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  5. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  6. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  10. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...