தினமும் பல நுாறு லாரிகளில் கனிம வளங்கள் கடத்தல்

தேனி மாவட்டத்தில் இருந்து தினமும் கேரளாவிற்கு பல நுாறு லாரிகளில் மணல் கடத்தப்படுகிறது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
தினமும் பல நுாறு லாரிகளில் கனிம வளங்கள் கடத்தல்
X

தேனி மாவட்டம் தமிழகத்தின் இரண்டாவது அழகிய இயற்கை வளம் பொருத்திய மாவட்டம். இங்கு மாட்டு வண்டி, டிராக்டர்களில் மணல் கடத்தினால் கடும் குற்றம். அவர்கள் மீது குண்டாஸ் வழக்கு கூட பாயும். ஆனால் லாரிகளிலும், டாரஸ்களிலும் அனுமதியின்றி எவ்வளவு வேண்டுமானாலும் கடத்தலாம். கலெக்டர், ஆர்.டி.ஓ., தாசில்தார், எஸ்.பி., டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர், வி.ஏ.ஓ., பொதுப்பணித்துறை என யாரும் தடுக்க மாட்டார்கள். தடுக்க கூடாது என்பது தான் சட்டமோ என்னவோ தெரியவில்லை. இது தான் இன்றைய தேனி மாவட்டத்தின் நிலை.

தேனி மாவட்டத்தில் மணல் எங்கு இருந்தாலும், தடையின்றி கேரளாவிற்கு அள்ளிச் செல்கின்றனர். அதுவும் குமுளிக்கு செல்ல, தமிழக எல்லையில் ஆறு சோதனைச்சாவடிகளை கடக்க வேண்டும். இதே போல் போடி மெட்டு, கம்பம் மெட்டு மலைப்பாதை வழியாகவும் சோதனைச் சாவடிகளை கடந்து செல்ல வேண்டும். (இந்த சோதனைச்சாவடிகளில் பணிபுரிய விரும்புபவர்கள் கூட, தங்களது உயர் அதிகாரிகளுக்கு கப்பம் கட்டி, இங்கு டூட்டி போடுங்கள் என அனுமதி வாங்க வேண்டிய நிலை உள்ளது. அப்படியானால் வருமானத்தை கணக்கிட்டுக் கொள்ளுங்கள்).

அது சரி தினமும் தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு இந்த மூன்று பாதைகளின் வழியாக செல்லும் கல், மண், மணல் உள்ளிட்ட கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் லாரிகளை எண்ணவே முடியாது. அந்த அளவு பல நுாறு லாரிகளில் கனிம வளங்கள் கேரளாவி்ற்கு கடத்தப்படுகிறது. அங்கு தான் கனிம வளங்களுக்கு நல்ல விலை கிடைக்கிறது. பக்கத்து மாநிலம், கடத்தலும் எளிது.

இது பற்றி எல்லாம் தெரிந்தவர்களே அமைதியாக இருக்கும் போது, விவசாயிகள் மட்டும் பதறுகின்றனர். காரணம் நாளுக்கு நாள், தேனி மாவட்டம் மெல்ல, மெல்ல பாலைவனமாக மாறி வருகிறது. கடந்த ஆண்டு 365 நாளில் குறைந்தது 200 நாள் மழை பெய்திருக்கும். அவ்வளவு நல்ல மழை கிடைத்தும், இன்று தேனி மாவட்டத்தின் சராசரி நிலத்தடி நீர் மட்ட உயர் 400 அடி முதல் 500 அடிக்கு கீழே சென்று விட்டது. சில இடங்களில் ஆயிரம் அடியை கடந்தும் தண்ணீர் இல்லை. காரணம் கனிமவள திருட்டு தான். இதனை யார் தடுக்கப்போகிறார்களோ தெரியவில்லை என விவசாயிகள் தினமும் ரத்தக்கண்ணீர் வடித்து வருகின்றனர்.

Updated On: 26 May 2023 7:45 AM GMT

Related News

Latest News

  1. தஞ்சாவூர்
    தஞ்சையில் பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடி
  2. தமிழ்நாடு
    அரிசிக்கொம்பனை மூர்க்கமாக்கியது யார்...?
  3. தஞ்சாவூர்
    தஞ்சை மாவட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
  4. தமிழ்நாடு
    விற்பனை வாகன அங்காடி: மாற்றுத்திறனாளிக ளுக்கு மாவட்ட நிர்வாகம்...
  5. உலகம்
    வெறுங்கையை வீசிக்கிட்டு போய் இனி பொருள் வாங்கலாம்
  6. உலகம்
    27 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவில் உலக அழகி போட்டி
  7. இந்தியா
    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மகளுக்கு திருமணம்
  8. தமிழ்நாடு
    புதுக்கோட்டையில் ”சிறுதானிய உணவகம்” அமைக்க ரூ 5 லட்சம் ஒதுக்கீடு
  9. வந்தவாசி
    பேருந்து நிலைய டிரான்ஸ்பார்மரில் திடீரென தீ: பயணிகள் அலறியடித்து...
  10. நாமக்கல்
    நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் வருகிற 15ம் தேதி சமரச பேச்சுவார்த்தை...