/* */

வருமுன் காப்போம் திட்ட முகாமில் 1056 பேருக்கு சிகிச்சை

கீழ்கொடுங்கலூர் கிராமத்தில் வருமுன் காப்போம் திட்ட முகாமில் 1056 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

வருமுன் காப்போம் திட்ட முகாமில் 1056 பேருக்கு சிகிச்சை
X

வந்தவாசி வட்டார மருத்துவ அலுவலர் எம்.ஆர்.ஆனந்தன் முகாமைத் தொடங்கி வைத்தார். 

வந்தவாசியை அடுத்த கீழ்கொடுங்கலூர் கிராமத்தில் பொதுச் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில், கீழ்கொடுங்காலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வருமுன் காப்போம் திட்ட முகாம் நடந்தது.

முகாமுக்கு ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதாகுமார் தலைமை வகித்தார். வந்தவாசி வட்டார மருத்துவ அலுவலர் எம்.ஆர்.ஆனந்தன் முகாமைத் தொடங்கி வைத்தார்.

சுகாதார ஆய்வாளர் லீலாவிநோதன் வரவேற்றார். கர்ப்பிணிகள் 20 பேருக்கு ஊட்டச்சத்து பெட்டகம், 50 பேருக்கு மக்களை தேடி மருத்துவ மருந்து பெட்டகம் ஆகியவற்றை வழங்கினார். கீழ்கொடுங்காலூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ஷோபா மற்றும் மத்துவக் குழுவினர் 1056 பேருக்கு சிகிச்சை அளித்தனர்.

முகாமில் வந்தவாசி வட்டாரக் குழந்தைகள் நலத் திட்ட அலுவலர் மரியம்மாள், ஒன்றியக்குழு உறுப்பினர் மகாலட்சுமி ராமச்சந்திரன், தி.மு.க. நிர்வாகிகள் கே.ஆர்.பழனி, தீனதயாளன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 14 March 2022 5:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெயிலை சமாளிக்க மட்டுமல்ல, உங்க ஆரோக்கியத்துக்கும் இளநீர்
  2. உத்திரமேரூர்
    ஓராண்டில் வாலாஜாபாத் ரயில்வே ஏற்றுமதி முனையம் சாதனை..!
  3. காஞ்சிபுரம்
    தமிழகத்தில் பாஜக ஆதரவாளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்!
  4. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...
  5. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  6. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  7. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  8. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் என் கல்லூரி கனவு திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
  10. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...