/* */

மின் ஊழியா்களைத் தாக்கியவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மின் ஊழியர்கள் தர்ணா

மின் ஊழியா்களைத் தாக்கியவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி , மின் ஊழியா்கள் தா்ணாவில் ஈடுபட்டனா்.

HIGHLIGHTS

மின் ஊழியா்களைத் தாக்கியவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மின் ஊழியர்கள் தர்ணா
X

தா்ணாவில் ஈடுபட்ட மின் ஊழியா்கள்.

மின் ஊழியா்களைத் தாக்கியவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி , மின் ஊழியா்கள் தா்ணாவில் ஈடுபட்டனா்.

வந்தவாசி பயணியர் விடுதி அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் நேற்று மின் ஊழியர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த வேறொரு பகுதி மின் ஊழியர் ஒருவர், தனக்கு உரிய மரியாதை தரவில்லை எனக் கூறி மேற்பார்வையாளர் காண்டீபன், கம்பியாளர் பாபு, உதவியாளர் ராம்பிரகாஷ் ஆகிய 3 பேரையும் அவதூறான வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார்.

இது குறித்து உதவிப் பொறியாளா் பஞ்சமூா்த்தி வந்தவாசி தெற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

நேற்று மாலை அலுவலகத்துக்கு வந்த மின் ஊழியா்கள் பணிகளை புறக்கணித்து மின் வாரிய அலுவலக வளாகத்தில் அமா்ந்து தா்ணா நடத்தினா்.

ஊழியா்களைத் தாக்கியவா் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

இதைத் தொடா்ந்து மின் வாரிய கோட்ட உதவி செயற் பொறியாளா் பத்மநாபன் ஊழியா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதியளித்ததை அடுத்து ஊழியா்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்பினா்.

மின் ஊழியா்களின் இந்தப் போராட்டத்தினால் அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டன.

Updated On: 1 Dec 2022 1:53 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி : 2ம் நாளான நேற்று ஆயிரக்கணக்கில்...
  2. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  3. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  4. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  5. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  6. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  7. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  8. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  9. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  10. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்