/* */

வந்தவாசியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகள் அகற்றம்

வந்தவாசியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகளை வியாபாரிகள் தாமாகவே முன்வந்து அகற்றினர்.

HIGHLIGHTS

வந்தவாசியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகள் அகற்றம்
X

வந்தவாசியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் கடந்த மாதம் பஜார் வீதி, தேரடி பகுதி, அச்சரபாக்கம் சாலை, காந்தி சாலை ஆகிய பகுதிகளில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடங்களின் ஆக்கிரமிப்பால் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக அகற்ற நெடுஞ்சாலைதுறை, காவல்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறையினர் முன் வந்தனர்.

அப்போது வியாபாரிகள் சங்கத்தினர் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை வருவதால் வியாபாரம் பாதிக்கப்படும். எனவே, பண்டிகைகள் முடிந்ததும் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிடுவோம் என் கேட்டுக்கொண்டனர்.

இந்த நிலையில் காலையில் வியாபாரிகள் தாமாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். துணை போலீஸ் சூப்பிரண்டு விஷ்வேசுவரய்யா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது வட்டாட்சியர் முருகானந்தம், நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் ராஜகணபதி, உதவி கோட்ட பொறியாளர் தியாகராஜன், உதவி பொறியாளர் வெங்கடேஷ், சாலை ஆய்வாளர் துலுக்கானம் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Updated On: 21 Jan 2022 7:06 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  8. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  9. தமிழ்நாடு
    திருச்சி உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜர்
  10. தொண்டாமுத்தூர்
    நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...