/* */

வந்தவாசியில் புகைப்பட கலைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

வந்தவாசியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு புகைப்படம் எடுக்க வந்த புகைப்பட கலைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

HIGHLIGHTS

வந்தவாசியில் புகைப்பட கலைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
X

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா நம்மூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயமூர்த்தி(வயது 35). இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி- ஆரணி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு புகைப்படம் எடுக்க வந்தார். நிகழ்ச்சியில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது ஜெயமூர்த்தி திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஜெயமூர்த்தி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் புகைப்படக்கலைஞர் திடீரென மயங்கி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Updated On: 16 May 2022 1:31 AM GMT

Related News