/* */

பஞ்சமி நிலத்தை மீட்க கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் நூதன போராட்டம்

வந்தவாசியில் பஞ்சமி நிலத்தை மீட்கக்கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் நூதன போராட்டம்

HIGHLIGHTS

பஞ்சமி நிலத்தை மீட்க கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் நூதன போராட்டம்
X

தாசில்தார் முருகானந்தத்திடம் மனு கொடுத்தனர்.

வந்தவாசியில் பஞ்சமி நிலத்தை மீட்கக்கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் கோரிக்கை எழுதப்பட்ட பதாகையை கழுத்தில் கட்டி தொங்க விட்டு தாலுகா அலுவலகம் முன்பு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட குழு உறுப்பினர் மோகன், வக்கீல் சுகுமார் மற்றும் சிலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், வந்தவாசி தாலுகாவுக்கு உட்பட்ட அருங்குணம் கிராமத்தில் 100 ஏக்கர் பஞ்சமி நிலம் உள்ளது. அதில் 90 ஏக்கர் நிலம் மாற்றுச் சமுதாயத்தினர் முறைகேடாக அனுபவித்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி நாங்கள் இந்த நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம், என்றனர். பின்னர் தாலுகா அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்ற அவர்கள் தாசில்தார் முருகானந்தத்திடம் மனு கொடுத்தனர்.

Updated On: 11 Jun 2022 6:40 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...