/* */

தேசூர் விற்பனைக்கூட அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

தேசூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

HIGHLIGHTS

தேசூர் விற்பனைக்கூட அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
X

ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். 

திருவண்ணாமலை மாவட்டம், தேசூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வழக்கம்போல் விவசாயிகள் பல்வேறு வகையான நெல் மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்தனர். அதில் 91 லாட்டுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டது. குண்டு ரகத்தைச் சேர்ந்த கோ 51, ஆர்.என்.ஆர். ஆகிய ரக நெல் மூட்டைகளை, 20 லாட்டுகள் வைக்கப்பட்டு இருந்தது. மீதி உள்ள 71 லாட்டுகள், பொன்னி ரக நெல் மூட்டைகளாகும்.

பொன்னி ரக நெல்லுக்கு, வியாபாரிகள் குறைந்த விலையை நிர்ணயம் செய்ததால் ஆவேசமடைந்த விவசாயிகள், திடீரென ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தேசூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ராஜமாணிக்கம் விரைந்து வந்து விவசாயிகள், வியாபாரிகளை வரவழைத்து விசாரித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

அதற்கு வியாபாரிகள், பொன்னி நெல்லுக்கு இவ்வளவு தான் விலை நிர்ணயம் செய்ய முடியும், எனக் கூறி அங்கிருந்து சென்று விட்டனர். உடனே விவசாயிகளும் விற்பனை செய்யாமல், 11 லாட் பொன்னி நெல் மூட்டைகளை, ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இருந்து வீட்டுக்கு திருப்பி எடுத்துச்சென்றனர்.

Updated On: 8 Jan 2022 7:06 AM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    இளைஞர்களை எழுச்சி பெறச் செய்த ஆன்மிக தூதர், விவேகானந்தர்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஏழை வீட்டின் மகாராணி..! (சிறுகதை)
  3. வீடியோ
    எந்த கொம்பனாலும் மாத்த முடியாது | | உலகத்துலேயே Modi தான் Top |...
  4. இந்தியா
    காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,800 கோடி அபராதம்: வருமானவரித்துறை நோட்டீஸ்
  5. வீடியோ
    🔴LIVE : தயாநிதி மாறனை எதிர்த்து அண்ணாமலை மத்திய சென்னையில் சூறாவளி...
  6. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  7. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  8. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?
  9. ஈரோடு
    ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க
  10. திருவள்ளூர்
    வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...