மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி
Equipment For Disabled Persons -பெரணமல்லூர் வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
HIGHLIGHTS
Equipment For Disabled Persons -திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் வட்டார வள மையம் சார்பில் நெடுங்குணம் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர்கள் குணசேகரன், ஆறுமுகம் ஆகியோர் தலைமை தாங்கினர். தலைமை ஆசிரியை ஷீலா, பெரணமல்லூர் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வசித்தனர்.
ஆசிரியர் பயிற்றுனர் இசையருவி வரவேற்றார். இதில் பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் 30 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உபகரணங்களை வழங்கி பேசினார்.
30 மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர்கள் இந்த உபகரணங்களை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜா கூறினார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2