/* */

சாலையோர பள்ளத்தில் பாய்ந்த பேருந்து: அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பள்ளி மாணவர்கள்

பள்ளி மாணவர்கள் சுற்றுலா சென்ற பஸ் சாலையோர பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 48 மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

HIGHLIGHTS

சாலையோர பள்ளத்தில் பாய்ந்த பேருந்து: அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பள்ளி மாணவர்கள்
X

விபத்துக்குள்ளான பேருந்து.

பள்ளி மாணவர்கள் சுற்றுலா சென்று திரும்பிய பஸ் சாலையோர பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 48 மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாழைப்பந்தல் அருகே மேல் புதுப்பாக்கம் கிராமத்தில் அரசினர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. அங்கு 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் 48 மாணவர்களை ஆசிரியர்கள் ஒரு தனியார் பஸ்சில் சுற்றுலா அழைத்துச் சென்றனர். மாணவர்கள் செஞ்சி கோட்டை, புதுச்சேரி பகுதிகளில் சுற்றி பார்த்து விட்டு வந்தவாசி வழியாக திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

வந்தவாசியை அடுத்த தெள்ளூர் கிராமத்தில் வரும்போது, சாலையோரம் தோண்டப்பட்ட பள்ளத்தில் பஸ் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் மாணவர்கள் அபயகுரல் எழுப்பினர்.. அவர்களின் சத்தத்தைக் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் ஓடி வந்து மாணவர்களை மீட்டு அங்குள்ள இடத்தில் அமர வைத்தனர். அதில் அதிர்ஷ்டவசமாக 48 மாணவர்களும் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் வந்தவாசி வடக்குப் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பொக்லைன் எந்திரம் மூலம் விபத்துக்குள்ளான பஸ்சை மீட்டனர். மீட்கப்பட்ட அதே பஸ்சில் மாணவர்களை ஏற்றி பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

Updated On: 10 May 2022 1:18 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  2. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  3. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  4. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  6. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  7. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  8. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்