/* */

வந்தவாசி அருகே தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

வந்தவாசி அருகே தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

வந்தவாசி அருகே தனியார் பொறியியல் கல்லூரி  மாணவர் தூக்கிட்டு தற்கொலை
X

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த பொன்னூர் மலை அருகே தனியார் என்ஜினீயரிங் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரி விடுதியில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் என்பவரின் மகன் கிஷோர்காந்த் (வயது 21) 4-ம் ஆண்டு பி.டெக் படித்து வந்தார். கிஷோர்காந்த் இன்று காலை வயிற்றுவலி இருப்பதாக சக மாணவர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் கல்லூரிக்கு செல்லாமல் விடுதியில் இருந்தார்.

இந்த நிலையில் கிஷோர்காந்த் மதியம் திடீரென விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த கல்லூரி நிர்வாகிகள் உடனடியாக வந்தவாசி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிஷோர்காந்த் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் கல்லூரி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Updated On: 23 Aug 2022 11:18 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  8. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  9. தமிழ்நாடு
    திருச்சி உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜர்
  10. தொண்டாமுத்தூர்
    நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...